TNUSRB PC தேர்வர்களுக்கான அறிவிப்பு – பாடத்திட்டம் & சிலபஸ் இதோ!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் 3,552 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு அடிப்படையில் தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
TNUSRB-PC தேர்வு:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் 3,552 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன் கீழ் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை ஜெயில் வார்டன் மற்றும் தீயணைப்பு வீரர் ஆகிய நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 7ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15 வரை நடைபெறும். இந்தப் பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் ஆர்வலர்கள், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnusrb.tn.gov.in./ என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Exams Daily Mobile App Download
இந்த தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள 3,552 பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், 2,180 காலிப் பணியிடங்கள் காவல்துறையில் இருக்கின்றன. மேலும் விசாரணைப் பிரிவில் 1,091 பணியிடங்களும், சிறைத்துறை மற்றும் சீர்திருத்தப் பிரிவில் 161 காலிப் பணியிடங்களும், தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவில் 120 காலிப் பணியிடங்களும் இருக்கின்றன. இந்த காவலர் பணியிடங்களுக்கான தேர்வு 2 பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வு. இதில் 40% மதிப்பெண்கள் எடுப்பது அவசியம். இல்லையென்றால், முதன்மை தாள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. இந்த பகுதி 80 மதிப்பெண்களுக்கு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மொழி தகுதித் தேர்வு
- இலக்கணம் – எழுத்து, சொல், பொருள், பொது, யாப்பு, அணி, மொழித்திறன், பிரித்து எழுதுதல், பிழைத் திருத்தம், எதிர்ச்சொல், சேர்த்து எழுதுதல், மொழிபெயர்ப்பு
- இலக்கியம் – திருக்குறள், தொல்காப்பியம், கம்பராமாயணம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அறநூல்கள், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியம், புதுக்கவிதை, மொழிபெயர்ப்பு நூல்கள் உள்ளிட்டவை
- தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும் – தமிழ் அறிஞர்கள், தமிழின் தொன்மை, தமிழரின் பண்பாடு, உரைநடை, தமிழ் தொண்டு, சமுதாயத் தொண்டு
TNPSC Group 4 விடைக்குறிப்பு 2022 – வெளியீடு (Official Link Out
முதன்மை எழுத்துத் தேர்வு
- இரண்டாம் பகுதியாக முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும். இதில் பெறக் கூடிய மதிப்பெண்கள் அடிப்படையில் தான் அடுத்த செயல்முறைக்கு தகுதி செய்யப்படுவார்கள். இது 70 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
- இதில் பொது அறிவு பகுதியில் இருந்து 45 வினாக்களும், உளவியல் பகுதியில் இருந்து 25 வினாக்களும் இடம் பெறும்.
- பொது அறிவு – இயற்பியல், வேதியியல், உயிரியல், சூழ்நிலையியல், உணவு & ஊட்டச்சத்தியல், வரலாறு, புவியியல், இந்திய அரசியல், பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகள் ஆகிய பகுதிகளிலிருந்து வினாக்கள் இடம்பெறும்.
- உளவியல் – தொடர்பு அல்லது தொடர்பு கொள் திறன், எண் பகுப்பாய்வு, தருக்க பகுப்பாய்வு, அறிவாற்றல் திறன், தகவல்களைக் கையாளும் திறன் ஆகியவற்றில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.
தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now
தேர்வுக்கு தயாராவது எப்படி?
- முதலில் தேர்வர்கள் சமூக அறிவியல் பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்கு அடுத்தாக உளவியல் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும்.
- அடுத்து அறிவியல், நடப்பு நிகழ்வுகள் மற்றும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
- இவற்றில், தமிழ் மற்றும் பொது அறிவு பகுதிகளுக்கு 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி பாடப் புத்தகங்களை நன்றாக படித்துக் கொள்ள வேண்டும்.
- குறிப்பாக புக் பேக் கொஸ்டின் மற்றும் அடைப்புக்குள் உள்ள தகவல்களையும் நன்றாக படித்துக் கொள்ள வேண்டும்.
- உளவியல், கணித பகுதிக்கு 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி கணித பாடங்களில் இருந்து, படித்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு நாளில் எவ்வளவு நேரம் எந்த பகுதிக்கு ஒதுக்கி படிக்க வேண்டும் என்பதை திட்டமிட்டு தயாராகிக் கொள்ளுங்கள். மேலும் போலீஸ் வேலைக்கு உடற் தகுதி தேர்வும் உண்டு என்பதால், படிப்புடன் கூடவே உடற்பயிற்சியும் செய்துக் கொள்ளுங்கள்.