TCS நிறுவன ஊழியர்களுக்கான அறிவிப்பு – முடிவுக்கு வரும் WFH!
TCS நிறுவன ஊழியர்களில் பலர் தற்போது வரைக்குமே வீட்டில் இருந்தபடியே தான் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், நவம்பர் 15 ஆம் தேதிக்குள் அனைத்து ஊழியர்களும் அலுவலகத்திற்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TCS நிறுவனம் அறிவிப்பு
இந்தியாவில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகே அனைத்து ஐடி நிறுவனங்களிலும் Work From Home முறை தொடங்கப்பட்டது. பின்னர், கொரோனா பரவல் குறைய குறைய ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைத்து வந்தனர். இதில், முதற்கட்டமாக மூத்த ஊழியர்கள் மட்டும் அலுவலகங்களுக்கு சென்று வேலை பார்த்து வந்தனர். பின்னர், அடுத்தடுத்து ஊழியர்களை அலுவலகங்களுக்கு வர உத்தரவிட்டனர். பின்னர் இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவ தொடங்கி விட்டது.
இதனால், ஊழியர்கள் கண்டிப்பாக வாரத்தில் இரண்டு நாட்களாவது அலுவலகத்திற்கு வந்து வேலை பார்க்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின்னர், டிசிஎஸ் நிறுவனம் ஊழியர்களின் விருப்பத்திற்காக 25 × 25 அணுகுமுறையை பின்பற்ற போவதாக அறிவித்திருந்தது. இந்த புதிய திட்டத்தினால் 25 சதவீதத்திற்கு மேல் ஊழியர்கள் அலுவலகங்களில் வேலை பார்க்க தேவையில்லை. மேலும், இந்த 25 × 25 அணுகுமுறை ஊழியர்களை ஹைப்ரிட் வேலை மாதிரிக்கு படிப்படியாக மாற்றும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றம் – முக்கிய தகவல் இதோ!
இந்நிலையில், டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வருவதனால் வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை மொத்தமாக முடக்கப்பட்டதாகவும், டிசிஎஸ் நிறுவன ஊழியர்கள் கட்டாயமாக நவம்பர் 15 ஆம் தேதி முதல் அலுவலகத்திற்கு வர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தை தொடர்ந்து அனைத்து ஐடி அலுவலகங்களிலும் கூடிய விரைவில் இந்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்