தமிழக ஓய்வுதாரர்களுக்கான அறிவிப்பு – நேர்காணலுக்கான வழிமுறைகள் இதோ!

0
தமிழக ஓய்வுதாரர்களுக்கான அறிவிப்பு - நேர்காணலுக்கான வழிமுறைகள் இதோ!
தமிழக ஓய்வுதாரர்களுக்கான அறிவிப்பு - நேர்காணலுக்கான வழிமுறைகள் இதோ!
தமிழக ஓய்வுதாரர்களுக்கான அறிவிப்பு – நேர்காணலுக்கான வழிமுறைகள் இதோ!

தமிழக அரசு ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியம். இந்த நிலையில் ஓய்வூதியதாரர்களை 2022ம் ஆண்டுக்கான நேர்காணல் செய்யும் வழிமுறைகள் குறித்து அரசு முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இதனை பின்பற்றி நேர்காணல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேர்காணல்:

தமிழகத்தில் அரசு ஓய்வூதியம் பெறும் நபர்கள் ஆண்டுதோறும் தங்கள் உயிருடன் இருப்பதற்கான வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் அப்போது தான் எவ்வித இடையூறும் இன்றி ஓய்வூதியத்தொகை தொடர்ந்து அவர்களுக்கு கிடைக்கும். இந்த நிலையில் கடந்த ஆண்டில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி 2020 மற்றும் 2021 ம் ஆண்டுகளுக்கு வாழ்நாள் சான்றிதழ் பெறுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் 2022ம் ஆண்டுக்கான வாழ்நாள் சான்றிதழை செப்டம்பர் மாதத்திற்குள் சமர்ப்பிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் ஓய்வூதியர்கள் 2022 ஆண்டுக்கான நேர்காணல் செய்வதற்கான பல்வேறு வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்திய அஞ்சல் துறை வங்கியின் சேவையை பயன்படுத்தி ஓய்வூதியர்கள் தங்களது இருப்பிடத்திலிருந்தபடியே தபால் துறை பணியாளர்கள் மூலமாக ரூ.70 கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து அதன் மூலம் ஆண்டு நேர்காணல் செய்யலாம். அதே போல அரசு இ-சேவா மற்றும் பொது சேவை மையங்கள் மூலம் உரிய கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம். மேலும் ஓய்வூதியர்கள் சங்கத்தின் மூலமாகவும் கைரேகை குறியீட்டு கருவி பயன்படுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம்.

நாளை முதல் அமலுக்கு வரும் புதிய தொழிலாளர் சட்ட விதிகளில் பாதிப்புகள் உள்ளதா? முழு விவரம் இதோ!

அதனை தொடர்ந்து ஜீவன் பிரமான் முகம் என்ற செயலி மூலமும் மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம். இதே போல் வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியர்கள் www.tn.gov.in/karuvoolam என்ற இணையதளத்தில் வாழ்நாள் சான்றிதழை பதிவிறக்கம் செய்து இந்திய தூதரக அலுவலரிடம் வாழ்நாள் சான்று பெற்று தபால் மூலம் அனுப்பலாம். மேலும் அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் கருவூலத்திற்கு சென்று ஆண்டு நேர்காணல் செய்யலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!