ஜூலை 8 முதல் அடுத்த 5 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு – இதற்காக தான்? அரசு விளக்கம்!
ஈதுல் அஸ்ஹா பண்டிகையை முன்னிட்டு வரும் ஜூலை 8ம் தேதி முதல் அடுத்த 5 நாட்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. பொது விடுமுறையை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு துறை அலுவலகங்கள் செயல்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.
பொது விடுமுறை
இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் வரும் ஜூலை 8 முதல் ஜூலை 12 வரை கொண்டாடப்பட இருக்கும் ஈதுல் அஜாவை முன்னிட்டு ஐந்து நாட்கள் பொது விடுமுறைக்கு பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள கடிதத்தின்படி, ஈதுல் அஸ்ஹா பண்டிகையை முன்னிட்டு வரும் ஜூலை 8ம் தேதி முதல் அடுத்த 5 நாட்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்படும் என்றும் பிரதமரின் இந்த ஒப்புதலுக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள அமைச்சரவை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதற்கு முன்னதாக, ஈத் விடுமுறைகள் தொடர்பான சுருக்கத்தை அமைச்சரவைப் பிரிவு, பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி இருந்தது. இதை கவனத்தில் கொண்ட பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் 5 நாட்கள் பொது விடுமுறைக்கு இப்போது ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கிடையில் ஜில்ஹாஜ் நிலவு தென்படாததால் ஈதுல் அஸ்ஹா ஜூலை 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் என்று மத்திய ரூட்-இ-ஹிலால் குழுத் தலைவர் மௌலானா அப்துல் கபீர் ஆசாத் அறிவித்துள்ளார்.
ஆதார் அட்டை செல்லாமல் போக வாய்ப்பு? சரிபார்ப்பது எப்படி! முழு விவரங்கள் இதோ!
இப்போது பொது மக்கள், ஈதுல் அஸ்ஹா பண்டிகைக்காக பலியிட வேண்டிய விலங்குகளை பெற முடியாமல் தவித்து வருவதாக புகார்கள் எழுப்பப்பட்டுள்ளது. அதாவது, பாகிஸ்தானில் தற்போது நிலவும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவை விலங்குகளின் விற்பனை விலையை அதிகரித்துள்ளதாக கருதப்படுகிறது. இருப்பினும் வரும் நாட்களில் பண்டிகை நெருங்கி வருவதால் சந்தையில் விற்பனை வேகமெடுக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.