இன்று முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்க அனுமதி – ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு!!
குஜராத் மாநிலத்தில் கொரோனா பரவல் வீதமானது குறைந்து வரும் காரணத்தால், ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் இன்று முதல் அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலையின் தாக்கமானது படிப்படியாக குறைந்து வருகிறது. அதாவது ஒவ்வொரு நாளும் தினசரி பாதிப்பு ஒன்றரை லட்சத்துக்கும் கீழாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும் பலி எண்ணிக்கையும் 3 ஆயிரத்துக்கும் கீழாக குறைந்துள்ளது. இதனால் மாநிலங்கள் தோறும் விதிக்கப்பட்டு வந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பானது குறைந்து வரும் நிலையில், சில கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியுள்ளது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் குஜராத்தில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய உத்தரவின் படி, மாநிலத்தின் 36 நகரங்களில் உள்ள அனைத்து கடைகளும் இன்று (ஜூன் 4) முதல் காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படும். உணவகங்களில் வீட்டு விநியோகம் செய்வதற்கும் தினமும் இரவு 10 மணி வரை அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்’ செயல்பாடு – மத்திய அரசு அறிவுறுத்தல்!!
இது தவிர ஜூன் 4 முதல் ஜூன் 11 வரை, மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு உத்தரவானது இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,207 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தவிர 17 பேர் பலியாகியுள்ளனர். முன்னதாக மே 27 முதல் ஜூன் 4 வரை மாநிலம் முழுவதும் உள்ள 36 நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவானது இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.