சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வட மாநில தொழிலாளர்கள் – கொரோனா பரவல் அச்சம்!!
தமிழகத்தில் பெருகி வரும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்படுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. இதனால் கோவையிலிருந்து வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர்.
ஊரடங்கு அச்சம்
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் போதிய பலனளிக்காதவாறு தென்பட்டால் தமிழகம் முழுவதும் இரவுநேர ஊரடங்கு அறிவிக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. தொடர்ந்து தமிழகத்தில் முழுஊரடங்கு அமல்படுத்தபடுமோ என்ற பயமும் மக்களிடையே அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கோவையில் தங்கி வேலை செய்து வரும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப துவங்கியுள்ளனர். தொழிற்சாலைகளுக்கு பேர் போன கோவை மாநகரில் பல்வேறு சிறு, குறு வார்ப்பட ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் பெரும்பாலும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
ஏப்ரல் 21 வரை பள்ளிகளுக்கு விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!!
கடந்த முறை நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட போது பல்வேறு மாநிலங்களில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாத சூழல் காணப்பட்டது. தற்போது தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற பொதுவான கருத்துக்கள் மக்களிடையே நிலவி வருவதால், வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க துவங்கியுள்ளனர். இதனால் தொழில்முனைவோருக்கு பல பாதிப்புகளும் நெருக்கடிகளும் ஏற்பட வாய்ப்புள்ளது என வணிகர் சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
வட மாநிலக்கார்களை அனுப்பிவிட்டு தமிழ் நாட்டுக்காரனை மாத சம்பளமாக ரூபாய் 18,000 கொடுத்து தமிழ் மண்ணை வாழ வைப்பதை விட்டுவிட்டு அடுத்த மாநிலக்காரனை நம்புவது தேச துரோகம். அரசியல்வாதிகள் அனைவருமே தூக்கிலிட நடைமுறைக்கு வந்தால் மோடியே போன்ற தீவிரவாதிகள் தமிழ்நாட்டை ஆள முடியாது.