நாடு முழுவதும் 5 நாட்களுக்கு ஊரடங்கு அமல் – வடகொரியா அரசு அறிவிப்பு!
வடகொரிய தலைநகர் பியோங்யாங்கில் சுவாச நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால் அடுத்த 5 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமல்
சில நாட்களாக வடகொரியாவின் தலைநகரில் மக்களுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தும் நோய்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. மேலும் சுவாச கோளாறு ஏற்பட்டு பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதனால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலருக்கு பயங்கரமான சளி தொல்லை ஏற்பட்டுள்ளது. ஆனால் இது கொரோனா பாதிப்பா என்பது குறித்து வடகொரியா அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை
பிப்.1 மத்திய பட்ஜெட் தாக்கல்.. ஐடி துறைக்கு விடிவு காலம் – வரப்போகும் குட் நியூஸ்!!
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 5 நாட்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மக்கள் அனைவரும் 5 நாட்களுக்கு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாட்டில் உள்ள மக்களுக்கு இடைவெளிகளில் உடலின் வெப்ப நிலை கண்காணிக்கப்படும் என்று வடகொரியா அரசு தெரிவித்துள்ளது.