பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு நோரோ வைரஸ் தொற்று உறுதி – அச்சத்தில் பொதுமக்கள்!
கடந்த 2 வருடங்களாக உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் நோரோ வைரஸ் என்ற புதிய வகை வைரஸ் கேரளாவில் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிக அச்சத்தில் உள்ளனர்.
நோரோ வைரஸ் தொற்று உறுதி:
உலகில் உருவாகும் புதிய வைரஸ் நோய்களின் இந்திய இறங்குதளமாக கருதப்படும் கேரளத்தில் 2 குழந்தைகளுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்சம் என்ற இடத்தில் 2 குழந்தைகளுக்கு நோரோ வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரையும் தனிமைப்படுத்தி சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருவதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார். இது குறித்து, கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறியது விழிஞ்சம் பகுதியில் 2 பேருக்கு நோரோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், கவலை கொள்ளத் தேவையில்லை.
Exams Daily Mobile App Download
அப்பகுதியில், சுகாதாரத்துறை நிலைமையை ஆய்வு செய்துள்ளது. அப்பகுதியில் வசிப்பவர்களிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நோரோ வைரஸ் பாதிப்புக்குள்ளான 2 குழந்தைகளின் உடல்நிலை சீராக உள்ளது என்று தெரிவித்தார். நோரோ வைரஸ் என்பது புது வகையான நோய் தொற்று இல்லை. பல காலமாக சமூகத்தில் பரவியிருக்கும் ஒரு வகையான பாதிப்பு தான் என்றாலும், குளிா் மற்றும் மழைக் காலங்களில் இதன் தாக்கம் அதி தீவிரமாக இருக்கும்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
அந்த காலங்களில் தான் குழந்தைகள், எதிா்ப்பாற்றல் குறைந்தவா்கள் மற்றும் முதியவா்கள் அதிக அளவில் இந்நோய்த் தொற்றுக்குள்ளாகின்றனா். ஏற்கனவே கேரள மாநிலத்தில் நிபா வைரஸ், ஸிகா வைரஸ், தக்காளி வைரஸ், ஷிகெல்லா வைரஸ், பறவைக் காய்ச்சல், எலிக்காய்ச்சல், பன்றி காய்ச்சல் போன்ற வைரஸ் காய்ச்சல் வரிசை கட்டி தாக்கியுள்ளன. கொரோனா தொற்றும் கேரளாவில் தான் முதலில் வந்து இறங்கியது. அந்த வரிசையில் நோரோ வைரஸ் என்ற புதிய வைரஸ் களமிறங்கி இருப்பது கேரள மக்களை பீதி அடைய வைத்துள்ளது.