தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் கவனத்திற்கு – இனி பொது இடங்களில் அனுமதி இல்லை!
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி இல்லை என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து அரசு பூங்காக்களின் இயக்குநர் கூறிய விபரங்கள் இப்பதிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
கொரோனா தாக்கம் முதல் மற்றும் இரண்டாம் அலை என கோரத்தாண்டவம் ஆடிய நிலையில் மாநில வாரியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இவ்வாறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது தொடர்ந்து கொரோனா தொற்று பரவும் விகிதம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கொரோனா இரண்டாம் அலையை தொடர்ந்து 3ம் அலை தீவிரமாக பரவும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதனை தடுக்க கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டது.
இன்ஜினியரிங் கலந்தாய்வு செல்லும் மாணவர்கள் கவனத்திற்கு – கல்வி ஆலோசகர் அறிவுறுத்தல்!
அதனை தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஊக்குவித்து வருகிறது. தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத் மாநகராட்சி தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் அனுமதி இல்லை என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் பேப்பர் வடிவிலோ அல்லது மொபைலிலோ எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புமாறு உத்தரவு பிறப்பிப்பு? உச்சநீதிமன்றம் மறுப்பு!
தடுப்பூசி போடாதவர்களுக்கு பேருந்துகள், நூலகங்கள், உடற்பயிற்சி கூடம், விளையாட்டு வளாகங்கள், நீச்சல் குளங்கள், கன்காரியா ஏரி முகப்பு, ஆற்றங்கரை உள்ளிட்ட இடங்களில் அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது. கோவிட்-19 தொற்றுக்கு எதிரான ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. தடுப்பூசி போடாதவர்கள் பூங்காக்கள் மற்றும் தோட்டங்களுக்குள் நுழைய தடை விதிக்கப்படும். முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு 2வது தவணைக்காக காத்திருந்தாலும் அவர்கள் போக்குவரத்து சேவை மற்றும் கட்டிடங்களில் நுழைய அனுமதி இல்லை என குஜராத் அரசு பூங்காக்களின் இயக்குநர் ஜிக்னேஷ் படேல் கூறியுள்ளார்.