PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – ஆன்லைன் மூலம் நாமினி அப்டேட்! முழு விபரம் இதோ!
நாடு முழுவதும் பெரும்பாலானோர் PF கணக்கு தொடங்கியுள்ளனர். இந்த PF கணக்கில் நாமினியை சேர்க்கும் செயல்பாட்டை ஆன்லைன் மூலம் மேற்கொள்வது குறித்த முழு விபரங்களை இந்த பதிவில் காணலாம்.
நாமினி அப்டேட்:
நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ஊழியர்கள் தங்களது ஊதியத்தை ஒரு பாதியை EPFO நிறுவனத்தில் செலுத்தி வருகின்றனர். அவ்வாறு செலுத்துவதன் மூலம் அவர்களது வயதான காலத்தில் வழங்கப்படும் தொகை அவர்களுக்கு பேருதவியாக அமையும். இந்த தொகை பணியாளர் தனது பணியில் ஓய்வு பெற்ற பிறகு மாதாந்திர பென்ஷன் அல்லது மொத்த தொகையாகவோ பெற்றுக் கொள்ளலாம். இந்த EPFO நிறுவனம் PF கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தங்களது நாமினியை அப்டேட் செய்யுமாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மஞ்சள் பையில் 20 பொருட்களுடன் பொங்கல் பரிசு – அரசு அறிவிப்பு!
ஏனெனில் பணியாளர் தனது பணிக்காலத்தின் போது திடீரென இறந்து விட்டால் அவரது பென்ஷன் அல்லது முதிர்வுத்தொகை நாமினிக்கு பயன்படும் என்ற நோக்கில் இந்த புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே நாமினி வைத்திருப்பவர்கள் அப்டேட் செய்யுமாறும், இதுவரை நாமினி தேர்வு செய்யாதவர்கள் வரும் டிச.31ம் தேதிக்குள் அப்டேட் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் எப்படி ஆன்லைன் மூலம் நாமினி அப்டேட் செய்வது என்பது குறித்த முழு விபரங்களையும் பின்வருமாறு காணலாம்.
ஆன்லைன் மூலம் நாமினி அப்டேட் செய்வதற்கான வழிமுறைகள்:
1. முதலில் https://www.epfindia.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
2. பின்னர் Services என்ற ஆப்ஷனில் Employees என்பதை தேர்வு செய்து, தோன்றும் பக்கத்தில் Member UAN/ Online Services என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
3. இப்போது உங்களது UAN நம்பர் மற்றும் Password கொடுத்து Login செய்ய வேண்டும்.
4. அதன்பின் Manage Tab என்பதன் கீழ் உள்ள E-Nomination என்பதை தேர்வு செய்து, அதில் Yes கொடுத்து Family Declaration ஐ அப்டேட் செய்ய வேண்டும்.
5. அதனை தொடர்ந்து Add Family Details க்ளிக் செய்து Nomination Details என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
6. கடைசியாக Save EPF nomination என்பதை தேர்வு செய்து, தோன்றும் அடுத்த பக்கத்தில் e-sign என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
7. இப்பொழுது உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP யை பதிவிட்டு Submit கொடுக்க வேண்டும்.