பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2022 அறிவிப்பு – மூன்று பேருக்கு பகிர்ந்தளிப்பு!
ஒவ்வொரு ஆண்டும் உலகின் சிறந்த விருதாக கருதப்படும் நோபல் பரிசு, இயற்பியல், அமைதி, வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான நோபல் பரிசு கடந்த 3 ஆம் தேதி முதல் அளிக்கப்பட்டு வருகிறது.
நோபல் பரிசு 2022
ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் ராயல் சுவீடிஷ் அகாடமி, இலக்கியம், வேதியியல், மருத்துவம், இயற்பியல், ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசை அறிவித்தது. மேலும் அமைதிக்கான நோபல் பரிசு நார்வேஜியன் நோபல் கமிட்டியால் அறிவிக்கப்பட்டது. இந்த துறைகளில் கீழ்கண்டவர்கள் இந்த வருடம் நோபல் பரிசை வென்றனர்.
Exams Daily Mobile App Download
- மருத்துவம் – ஸ்வாண்டே பாபோ
- இயற்பியல் – அலைன் ஆஸ்பெக்ட், ஜூன் எப் கினாசர் மற்றும் அண்டன் ஸிலிங்கர்
- வேதியியல் – பேரி ஷார்ப்லஸ், கேரோலின் பெர்டோசி, மார்டென் மெல்டால்
- இலக்கியம் – Annie Ernaux
- அமைதி – Ales Bialiatski, ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பு நினைவகம் மற்றும் சிவில் உரிமைகளுக்கான உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பு
இந்நிலையில் இன்று (10.10.2022) பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை ராயல் சுவீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி 2022ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது. அதாவது அமெரிக்காவைச் சேர்ந்த பென் எஸ்.பெர்னாக், டக்ளஸ் டைமண்ட், பிலிப் டிவிக் ஆகிய மூன்று பேருக்கும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகிள் மற்றும் நிதி நெருக்கடிகள் குறித்த ஆய்வுக்காக இவர்களுக்கு இந்த நோபல் விருது அளிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்