வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 2021 அறிவிப்பு – 2 விஞ்ஞானிகள் தேர்வு!
உலகில் உள்ள ஆராய்ச்சியாளர்களை பெருமைப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று வேதியல் துறையில் மகத்தான சாதனை புரிந்த 2 ஆராய்ச்சியாளர்களுக்கு விருதுகள் பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசு 2021
உலகில் உள்ள ஆராச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளை பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் பல துறைகளின் கீழ் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த அல்பேர்ட் நோபல் அவர்களின் நினைவாக இந்த விருதுகள் கடந்த 1901ம் ஆண்டு முதல் அளிக்கப்பட்டு வருகின்றது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மருத்துவம் மற்றும் இயற்பியல் துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டது.
TN TRB முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு வயது வரம்பு – அரசுக்கு வலியுறுத்தல்!
இந்த முறை மருத்துவ துறையின் கீழ் அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் நேற்று இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜப்பானை நாட்டை சேர்ந்த சுயுகுரோ மனாபே, ஜெர்மனியைச் சேர்ந்த கிளாஸ் ஹசில்மேன், இத்தாலியைச் சேர்ந்த ஜார்ஜியோ பாரிசி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 8 வரை 144 தடை உத்தரவு அமல் – காவல்துறை அறிவிப்பு!
இன்று வேதியல் துறையில் சாதனை படைத்துள்ள ஜெர்மனி நாட்டை சேர்ந்த பென்ஜமின் லிஸ்ட், அமெரிக்க நாட்டை சேர்ந்த டேவிட் மெக்மில்லன் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் ‘for the development of asymmetric organocatalysis’ என்ற ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வகையான மருந்து வகைகளை கண்டுபிடித்தற்காகவும், வேதியியலை பசுமையாக்க திட்டங்களை வகுத்து கொடுத்ததற்காகவும் இருவருக்கும் இந்த விருது வழங்கப்பட இருக்கிறது.