இனிமேல் வீட்டில் இருந்தே வேலை (WFH) இல்லை – மத்திய அரசின் அதிரடி முடிவு!
மத்திய அரசு பணியாளர்கள் 100% அலுவலகம் வந்து பணிபுரிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடை முறை பிப்ரவரி 7ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
அரசின் உத்தரவு:
இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கொரோனா மூன்றாம் அலை பரவ தொடங்கி விட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வந்தது. அதனால் முன்னெச்சரிக்கையாக அரசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மட்டும் பொது இடங்களில் கட்டுப்பாடுகள் போன்றவை அமலில் உள்ளது. அதனை தொடர்ந்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா இரண்டாம் அலை காரணமாக வெகு நாட்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
SSC CGL தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் வகுப்புகள்..!
நோய் பரவலை கட்டுப்படுத்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் 50% வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி வழங்கியது. கர்ப்பிணிகள் மாற்றுத்திறனாளிகள், நோய் தொற்று அதிகம் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிப்பவர்கள் அலுவலகம் வந்து பணி புரிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அரசின் முயற்சியால் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதனால் மத்திய அரசு 100% ஊழியர்கள் அலுவலகம் வந்து பணிபுரிய உத்தரவிட்டது.
CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள்! முழு விபரங்கள் இதோ!
பிப்ரவரி 7, திங்கட்கிழமை முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை முடிவுக்கு வந்துள்ளது. அலுவலகங்களில் ஊழியர்கள் அனைவரும் தொற்று பரவலை கருத்தில் கொண்டு கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிசிஎஸ் உட்பட பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் கடந்த மாதம் முதலே தனது ஊழியர்களை அலுவலகம் வந்து பணிபுரிய அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.