சென்னையின் இப்பகுதியில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் கிடையாது – மாநகராட்சி அறிவிப்பு!
சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக முக்கிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டது. இதனையடுத்து அதன் ஒரு பகுதியாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து செல்லும் பிரதான குழாய்களை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது அதனால் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
குடிநீர் வாரியம்:
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மக்கள் தொகை அதிகம். அதனால் வழக்கமாகவே போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும். இதனை கட்டுப்படுத்த போக்குவரத்து துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த போக்குவரத்து நெரிசலால் பல இடங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் முக்கிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மெட்ரோ ரயில் சேவையை மாநகர் முழுவதும் விரிவுபடுத்துவதற்கான பணிகள் நடந்து வருகிறது.
பள்ளி மாணவர்களுக்கு 30 நாட்கள் கோடை விடுமுறை – மாநில கல்வித்துறை அறிவிப்பு!
மேலும் சென்னை மெட்ரோ ரயில் 2வது கட்ட திட்டத்தில் 3 வழித்தடங்களில் 118.9 கி மீ மெட்ரோ பாதை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் மாதவரம்-தரமணி இணைப்பு சாலை வரை, 30 மெட்ரோ ரயில் நிலையங்கள் சுரங்கத்தில் கட்டப்பட இருக்கின்றன. இந்த பணிகளுக்காக சீனாவில் இருந்து 23 நவீன இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சாலையில் மெட்ரோ ரயில் நிலைய பணிகளுக்காக சென்னையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து செல்லும் குழாய்களை மாற்றி இணைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.
சென்னை வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு – போக்குவரத்து மாற்றம்!
இப்பணிகள் மே 23ம் தேதி முதல் 24ம் தேதி மாலை 4 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. அதனால் மாதவரம் பகுதிக்கு உட்பட்ட விநாயகபுரம், பொன்னியம்மன் மேடு, கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, வியாசர்பாடி, பட்டேல் நகர், புது வண்ணாரப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, பெரம்பூர் மற்றும் புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது என்பதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.