தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – புத்தகப்பை இல்லா தினம் ரத்து!
தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 26ம் தேதி புத்தகப்பை இல்லா தினம் கொண்டாடப்படும் என்று அரசு தெரிவித்தது. இந்த நிலையில் இதனை தற்போது அரசு ரத்து செய்துள்ளது. இதற்கான காரணங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
புத்தகப்பை இல்லா தினம்
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெற்றது. இதனால் மாணவர்களுக்கு மன ரீதியாக மிகவும் பாதிப்பு அடைந்தனர். அத்துடன் சில மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் கல்வி கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து கொரோனா பரவலின் 2ம் அலை குறைந்ததால் கடந்த நவம்பர் மாதத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது. ஆனால் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் பரவல் தமிழகத்தில் வேகமாக பரவ தொடங்கியது.
TN TRB முதுகலை ஆசிரியர் தேர்வெழுத உள்ளோர் கவனத்திற்கு – முக்கிய அறிவுறுத்தல்கள் வெளியீடு!
அதனால் தமிழகத்தில் 3ம் அலையின் தாக்கம் தொடங்கியதால் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியது. இதில் குறிப்பாக மீண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைய தொடங்கியதால் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பிப்ரவரி 26ம் தேதி புத்தகப்பை இல்லா தினம் கொண்டாடப்படும் என்று அறிவித்தது.
IND vs WI 3rd ODI: வெஸ்ட் இண்டிஸை ஒயிட் வாஷ் செய்யுமா இந்திய அணி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
இந்த தினத்தை மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாகவும் அத்துடன் மாணவர்களின் பாடச்சுமையைக் குறைக்கும் விதமாகவும் இருக்கும் என்று கூறியுள்ளது. ஆனால் இதனை தற்போது அரசு ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளதாவது, கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் இப்போதுதான் திறக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கற்றல் இழப்புகளை சரி செய்ய வேண்டும். மேலும் இந்த தினத்தை கொண்டாடடுவதால் பாடங்களை முடிப்பதில் சிரமங்கள் ஏற்படும். என்றும் கூறப்படுகிறது. அதனால் புத்தகப்பை இல்லா தினம் கொண்டாடப்படுவதை ரத்து செய்யப்படுகிறது என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.