தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை இல்லை – அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் புதிய கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை ஜூன் 14ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், ஊரடங்கு தளர்வில்லாத மாவட்டங்களுக்கான மாணவர் சேர்க்கை குறித்து அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
மாணவர் சேர்க்கை:
தமிழக அரசு மற்றும் அரசு உதவிக்கு பெறும் பள்ளிகளில் 2021 – 2022ம் கல்வியாண்டுக்கான 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் அச்சுறுத்தல் மற்றும் அதனை தொடர்ந்து விதிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் கோடை விடுமுறை போன்ற காரணங்களால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார சரிவு காரணமாக புதிதாக 5 லட்சம் சேர்க்கை அரசு பள்ளிகளில் நடந்துள்ளது.
பகல் 1 மணி வரை மட்டுமே கடைகள் செயல்படும் – வணிகர் சங்கம் அறிவிப்பு!!
இதேபோல், நடப்பு ஆண்டிலும் அதிக அளவிலான மாணவர் சேர்க்கை அரசு பள்ளிகளில் நடைபெறும் என்று அரசு எதிர்பார்க்கிறது. இதனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வரும் ஜூன் 14ம் தேதி முதல் தொடங்க இருப்பதாகவும், தலைமை ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்கள் மற்றும் சில ஆசிரியர்கள் ஜூன் 14ம் தேதி முதல் பணிக்கு வரவும் கேட்டுக் கொள்ளப்படுவதாக அரசு அறிவித்திருந்தது.
TN Job “FB Group” Join Now
தற்போது ஜூன் 21ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள 11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. அங்கு தொடர்ந்து தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தளர்வில்லாத 11 மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். மாணவர் சேர்க்கை நடைபெறும் பள்ளிகளில், தற்போது கொரோனா காலம் என்பதால் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க மாணவர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.