அவசர கால சூழ்நிலைகளில் SMS கட்டணம் இல்லை – தொலை தொடர்பு அமைச்சகம் தகவல்!
நாட்டில் பேரிடர் போன்ற அவசர கால சூழ்நிலைகளில் அனுப்பப்படும் SMSகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படாது என்று தொலை தொடர்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கான அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
SMS கட்டணம்:
நாட்டில் உள்ள அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் வாடிக்கையாளர்கள் செய்திகளை பரிமாறிக் கொள்வதற்கு பல சிறப்பு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ஆனால் தற்போது அனைவரும் அன்லிமிடெட் திட்டங்களை ரீசார்ஜ் செய்வதால் அதில் இருந்து SMSக்கு தனியாக பணம் எடுக்கப்படுவதில்லை. இந்நிலையில் TRAI அமைப்பு பேரிடர் போன்ற இக்கட்டான காலங்களில் அனுப்பும் செய்திகள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு? அதிர்ச்சியில் மக்கள்.. அமைச்சர் விளக்கம்!
Exams Daily Mobile App Download
அதன்படி,பேரிடர் காலங்களில் பயனர்கள் அனுப்பும் செய்திகளுக்கு எந்த ஒரு கட்டணமும் அனுப்ப முடியாது. ஆனால் அதேபோல், பேரிடர் அல்லாத சூழ்நிலைகளில் ஒரு smsக்கு 2 பைசா கட்டணமாக விதிக்க முடியும் என்று அனுமதி அளித்துள்ளது. பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005-ன் கீழ் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் படி இந்த கட்டண நிர்ணய முறையானது செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.