அண்ணா பல்கலைக்கழகத்தில் தொழிற்கல்வி மாணவர்களுக்கு சீட் கிடையாது? பெற்றோர்கள் அதிருப்தி!
தொழிற்கல்வி முடித்து விட்டு இன்ஜினியரிங் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் சீட் கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தொழிற்கல்வி:
தொழிற்கல்வி மாணவர்களுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் 100 இடங்கள் மற்றும் தனியார் கல்லுாரிகளில் 4 சதவீத இடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள மூன்று கல்லுாரிகள், பல்கலைக்கழகத்தின் மண்டல மற்றும் உறுப்பு கல்லுாரிகளாக செயல்பட்டு வரும் 17 கல்லுாரிகள் என மொத்தம் 20 கல்லுாரிகளில் தொழிற்கல்வி மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படாது என அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அரசின் இந்த திடீர் அறிவிப்பால் தொழிற்கல்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தொழிற்கல்வி படிக்கும் மாணவர்கள் தொழிற்கல்வி படிப்பை முடித்த பிறகு கட்டாயமாக இன்ஜினியரிங் படிப்பில் தான் சேர முடியும். ஆனால் இந்தத் தொழில் கல்வி மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மண்டல மற்றும் உறுப்பு கல்லூரிகளில் சேர இடமில்லை என அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் தொழில் கல்வி படிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் கூறிவரும் நிலையில் அரசு இத்தகைய முடிவெடுத்திருப்பது வேதனை அளிக்கிறது என பெற்றோர்கள் கூறியுள்ளனர்.
Google நிறுவனத்தின் பெண் ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – உடனடி இடமாற்றம்! இதற்காக தான்?
எப்போதும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு இன்ஜினியரிங் கவுன்சிலிங் வரும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் சேரவே முன்னுரிமை அளிக்கப்படும். ஆனால், தற்போது மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என அரசு அறிவித்துள்ள நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் இந்த விவகாரத்தில் பங்கு பெற்று தொழிற்கல்வி மாணவர்களுக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 20 கல்லூரிகளில் படிக்கலாம் எனது முக்கியத்துவம் வாய்ந்த முடிவை அறிவிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.