தடுப்பூசி செலுத்தாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது – அரசு உத்தரவு!
உலகின் பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பெருந்தொற்று தலைதூக்கி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா தடுப்பூசி:
உலகின் பல்வேறு நாடுகளில் கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவியது. அதனை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தது. அவ்வாறு தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பின்னர் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு கடந்த சில வாரங்களாக பாதிப்புகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. ஆனால் மீண்டும் ஒரு சில நாடுகளில் கொரோனா தொற்று பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்கா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் மீண்டும் கொரோனா பரவி வருகிறது.
தமிழகத்தில் நவ.6 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஏற்பட்ட முதல் அலையில் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை 1,037 ஆக இருந்தது. கடந்த அக்.29ம் தேதி முதல் புதிய உச்சமாக இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் புதிதாக 3,635 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் 409 பேர் புலம்பெயர் தொழிலாளர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 23ம் தேதி சிங்கப்பூர் சுகாதாரத்துறை முழுவதுமாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அரசு ஊழியர்கள் வரும் ஜன.1 முதல் அலுவலகங்களுக்கு வருகை புரியலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் நவ.9 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – நவ.27 பணி நாளாக கலெக்டர் அறிவிப்பு!
இதுவரை 98% மக்கள் தான் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். மீதமுள்ள 2% ஆன 3 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு அறிவுறுத்தி வருகிறது. mRNA தடுப்பூசி போட்டுக்கொள்ள மருத்துவ ரீதியாக தகுதி பெறாதவர்கள் mRNA அல்லாத சினோவாக் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வீட்டிலிருந்து வேலை செய்யும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.