ரயில் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு – ‘இனி முன்பதிவு தேவையில்லை’! தெற்கு ரயில்வே!
கொரோனா தொற்று குறைந்து வருவதால் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதனை தொடர்ந்து முன்பதிவு இல்லாத பெட்டிகள் மீண்டும் 12 ரயில்களில் இணைக்கப்பட்டு வரும் 3 ஆம் தேதி முதல் பொதுமக்கள் பயணிக்கலாம் என்றும் தெற்கு ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே அறிவிப்பு:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் தற்போது குறைந்து வருவதை தொடர்ந்து அந்தந்த மாநில அரசு பல தளர்வுகளை அறிவித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ரயில்வே துறையிலும், ரயில் பயணிகளுக்கும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. மீண்டும் ரயில் சேவையை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் நோக்கில் ரயில்வே நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதை தொடர்ந்து முன்பதிவு இல்லாத பெட்டிகள் குறிப்பிட்ட சில ரயில்களில் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. கொரோனா காலத்தில் இந்த பெட்டிகள் அகற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் மாத ஊரடங்கிற்கான புதிய வழிகாட்டுதல்கள் – மாநில அரசு வெளியீடு!
மேலும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு செய்த பிறகே பயணம் செய்ய வேண்டும் என்றும் அறிவித்திருந்தது. தற்போது இந்த கட்டுப்பாட்டை தளர்த்தி உள்ளது. அதன்படி முன்பதிவு இல்லாத பெட்டிகள் மீண்டும் 12 ரயில்களில் இணைக்கப்பட உள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து முன் பதிவு செய்யாத பயணிகள் வருகிற டிசம்பர் 3 அன்று பயணிக்க அனுமதிக்கப்பட உள்ளார்கள். இவ்வாறு இணைக்கப்பட முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிக்க இரண்டாம் நிலை வகுப்பு பயணிகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணம் தான் வசூலிக்கப்படும்.
கொரோனா தொற்றிலிருந்து முழுவதுமாக மீண்டு வந்த நடிகர் கமல் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!
இந்த முன்பதிவு செய்யாத ரயில் பெட்டிகள் சென்ட்ரல் – பெங்களூரு பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் , பெங்களூரு பிருந்தாவன் – சென்ட்ரல், சென்ட்ரல் – கோவை எக்ஸ்பிரஸ், கோவை – சென்ட்ரல் இண்டர்சிட்டி, விழுப்புரம் – திருப்பதி எக்ஸ்பிரஸ், திருப்பதி – விழுப்புரம், சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ், திருப்பதி – சென்ட்ரல், சென்ட்ரல் – திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ், திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ் – சென்ட்ரல், மங்களூரு சென்ட்ரல் – மட்கான் பாசஞ்சர், மட்கான்- மங்களூரு சென்ட்ரல் பாசஞ்சர் போன்ற 12 ரயில்களில் இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.