தமிழகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் மின்தடை இருக்காது – அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி!
தற்போது அண்டை மாநிலங்களில் இருந்து கூடுதலாக 550 மெகாவாட் மின்சாரம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் மின் தடை இருக்காது என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி அளித்துள்ளார்.
மின்தடை நிறுத்தம்
தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக மின் தடை அதிகளவு காணப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒரு நாளைக்கு சுமார் 5 மணிநேரங்கள் வரையிலும் மின் வெட்டு ஏற்படுகிறது. இதனால் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வரும் வேளையில், தமிழகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் மின் தடை இருக்காது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் அளித்துள்ளார். அதாவது நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின்வெட்டு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இன்னும் ஒரு சில நாளைக்குள் இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என அவர் உறுதியளித்திருக்கிறார்.
தமிழகத்தில் விரைவில் முழு ஊரடங்கு அமல்? முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ‘மத்திய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய 296 மெகாவாட் மின்சாரம் தற்போது வரை கிடைக்கவில்லை. அதனால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இப்போது மாநிலத்தில் நிலவி வரும் மின்பற்றாக்குறையை சமாளிக்க 3,000 மெகாவாட் மின்சாரம் தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனுடன் சுமார் 4.80 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ExamsDaily Mobile App Download
மேலும், டன் 137 டாலர் அடிப்படையில் GST உடன் சேர்த்து 143 டாலர் விலையில் நிலக்கரி இறக்குமதி செய்யவும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் மின் உற்பத்தியை 31% அதிகரிக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்குள் நிலக்கரி இறக்குமதி செய்ய இரண்டு நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக, அண்டை மாநிலங்களில் இருந்தும் கூடுதலாக 550 மெகாவாட் மின்சாரம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் மின்தடை என்ற பிரச்சனை இருக்காது’ என்று தெரிவித்துள்ளார்.