ஜன.14ம் தேதி பொங்கல் விடுமுறை கிடையாது – பொதுமக்கள் அதிர்ச்சி!
கேரள மாநிலத்தில் உள்ள காலண்டரில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அளிக்கப்படும் விடுமுறை ஜன.14ம் தேதி இல்லாமல் ஜன.15ம் தேதி என குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் அம்மாநிலத்தில் வசிக்கும் தமிழர்கள் தங்களது மனவருத்தத்தை அரசிடம் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் விடுமுறை:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ளது. அதாவது வரும் ஜன.14ம் தேதி பொங்கல் பண்டிகை வர உள்ளது. இவ்வாறு கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதால் விதிக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டுப்பாடுகளுக்கிடையில் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் விதமாக தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறாக தமிழர்கள் வசிக்கும் பல்வேறு மாநிலங்களில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
மாதம் ரூ.86,500 சம்பளத்தில் இந்திய சணல் கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
அந்த வகையில் கேரள மாநிலத்திலும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, வயநாடு மாவட்டங்களில் பூர்விகமாக தமிழ் பேசும் மக்கள் வசித்து வருகின்றனர். அதனால் பொங்கல் பண்டிகை முன்னிட்டு கேரளாவிலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஓணம் பண்டிகையை முன்னிட்டு குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டதை போல பொங்கல் பண்டிகைக்கும் மேற்குறிப்பிட்ட சில மாவட்டங்களில் வசிக்கும் தமிழர்களுக்காக விடுமுறை அறிவித்துள்ளது.
இனி ‘TATA IPL’ தான் – டைட்டில் ஸ்பான்சரை தட்டி தூக்கிய டாடா நிறுவனம்!
அதன்படி கடந்த சுமார் 12 ஆண்டுகளாக தை முதல் நாள் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை என கேரளாவில் இதுவரை இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டில் தை முதல்நாள் வரும் ஜன.14ம் தேதி வருகிறது. ஆனால் கேரள அரசு வெளியிட்டுள்ள காலண்டரில் தை பொங்கல் வரும் ஜன.15ம் தேதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து கேரள தமிழ் பாதுகாப்பு இயக்க பொது செயலாளர் அவர்கள் தை மாதம் முதல் நாள் தான் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை கேரள அரசு மாற்றி தை 2ம் தேதி கொண்டாடுவது தவறு என்றும், தை முதல் நாளே பொங்கல் விடுமுறை அறிவிக்குமாறும் அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.