இந்தியாவில் கொரோனாவுக்கு இனி பிளாஸ்மா சிகிச்சை தேவையில்லை – மருத்துவ கவுன்சில் பரிந்துரை!!
கொரோனா தொற்று நோய்க்கு இந்தியாவில் இனி பிளாஸ்மா சிகிச்சை தேவையில்லை என்று மருத்துவ கவுன்சில் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
கொரோனா சிகிச்சை:
நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு நாளில் நாடு முழுவதும் பாதிக்கும் புதிய நபர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரெம்டெசிவிர் முன்பதிவு செய்ய இணையதளம் – மருத்துவ பணிகள் கழகம் தொடக்கம்!!
மத்திய அரசும், மாநில அரசும் சிகிச்சைக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து வருகின்றது. கொரோனாவிற்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர்கள் பல ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த சிகிச்சை மருத்துவ முறையினால் பல சர்ச்சைகள் எழுந்துள்ளது. காரணம் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் பிளாஸ்மா தானமாக பெற்று நோயாளிகளுக்கு வழங்கப்படும்.
TN Job “FB Group” Join Now
தொடர்ந்து எழுந்து வந்த சர்ச்சையின் காரணமாக மருத்துவ கவுன்சில் பிளாஸ்மா சிகிச்சை தொடர்பாக ஆய்வு செய்து வந்தது. ஆராய்ச்சியின் முடிவில் இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க தேவை இல்லை என்று மருத்துவ கவுன்சில் மத்திய அரசை பரிந்துரைத்தது. இதனையடுத்து மத்திய அரசும் பிளாஸ்மா சிகிச்சையை கைவிடுவதாக அறிவித்துள்ளது.