தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்தாவிட்டால் அபராதம் இல்லை? அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் உரிய காலத்திற்குள் மின் கட்டணம் செலுத்தா விட்டால் அபராதத் தொகை வசூலிக்க கூடாது எனவும், கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் தமிழ் மாநில காங்கிரஸ் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒரு மாத காலமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏழை மக்கள் உணவின்றி பசியால் வாடுகின்றனர். தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டு வாடகை, மளிகை, இதர செலவுகள் போன்ற அத்தியாவசிய தேவைகளை பெற முடியாத நிலையில் உள்ளனர்.
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு – கமிட்டி ஆலோசனை!!
இந்த நிலையில் மே மாத மின் கட்டணம் செலுத்த 3 சலுகைகளை மின் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். உரிய காலத்திற்குள் மின் கட்டணம் செலுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. அன்றாட வாழ்க்கைக்கே அல்லாடும் இந்த நிலையில் அரசு அபராத தொகை வசூலிப்பது கண்டிக்கத்தக்கது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
இந்த ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு மேலும் கால அவகாசமும், கட்டணம் கட்டத் தவறினால் மின் இணைப்பை துண்டிப்பதோ அல்லது அபராத தொகை வசூலிப்பதோ கூடாது. எனவும் மின்சார வாரியம் மின்சார கட்டணத்தை அபராதம் இல்லாமல் திரும்ப செலுத்த கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக ஜி.கே.வாசன் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.