KYC விவரங்களை நீங்கள் புதுப்பிக்க வேண்டுமா? இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!! RBI அறிவிப்பு!!
பொதுவாக வங்கியில் வாடிக்கையாளர்கள் தங்களின் KYC விவரங்களை புதுப்பிக்க வங்கிக்கு செல்ல வேண்டியுள்ளது. தற்போது உங்களின் KYC விவரங்களில் மாற்றமில்லையெனில் வங்கிகளுக்கு செல்ல வேண்டியதில்லை என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
KYC விவரங்கள்
தற்போது அனைத்து துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆன்லைன் மோசடிகள் ஏற்படுவது அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் குறிப்பாக வங்கி வாடிக்கையாளர்களிடம் ஆன்லைன் முறையில் பண மோசடி நடைபெறுகிறது. இதனை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு – பள்ளிக்கல்வி துறை முக்கிய அறிவிப்பு!
Follow our Instagram for more Latest Updates
அந்த வகையில் வாடிக்கையாளர்களின் KYC விவரங்கள் வங்கிகள் சரியாக வைத்திருக்க வேண்டியது கட்டாயமென RBI அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ஒரு வாடிக்கையாளர் தங்களின் ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களில் இருக்கும் விவரங்கள் வங்கிகளில் சமர்ப்பித்த KYC விவரங்களுடன் ஒத்து இருக்க வேண்டும். இல்லையெனில் புதிய KYC செயல்முறையை வாடிக்கையாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இதற்கு வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு நேரில் சென்று புதுப்பிக்க வேண்டியுள்ளது. தற்போது RBI வெளியிட்ட அறிவுறுத்தலின் படி, வாடிக்கையாளர்களை நேரடியாக வந்து KYC விவரங்களை புதுப்பிக்க வற்புறுத்தக்கூடாது என வங்கிகளுக்கு வலியுறுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் தங்களின் KYC விவரங்களில் மாற்றங்கள் ஏதும் இல்லையெனில் வாடிக்கையாளர்கள் தங்களின் சுய அறிக்கையை சமர்ப்பித்தால் போதுமானது, வங்கிகளுக்கு நேரில் வர வேண்டிய அவசியமில்லையென RBI அறிவுறுத்தியுள்ளது.