இனி வீட்டில் இருந்தே வேலை, TCS நிறுவனம் அறிவிப்பு – ஊழியர்கள் மகிழ்ச்சி!
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தனது சேவை மற்றும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. இதே வேளையில் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கும் பணிகளையும் செய்து வருகிறது.
WFH முறை
இந்தியாவின் கடந்த 2 வருடமாக கொரோனா தொற்றின் காரணமாக பெரிய பெரிய நிறுவனங்களில் ஆட்களை தேர்தெடுக்கவில்லை.மேற்கொண்டு இந்த வருடம் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் தகுதியான நபர்களை தேர்த்திடுகின்றன.விப்ரோ மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அழைத்து உள்ள நிலையில் டிசிஎஸ் நிறுவனமும் அனைத்துப் பிரிவு ஊழியர்களையும் அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ளது. இதற்கிடையில் டிசிஎஸ் நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடியில் அடுத்தடுத்து முறைகேடு – பொதுமக்கள் அதிருப்தி!
தற்போது ஹைப்ரிட் மாடல் உடன் ஊழியர்களை அழைத்து வருகிறது. மேலும் ஊழியர்களின் நலனுக்காக டிசிஎஸ் நிர்வாகம் தனது அலுவலகத்தில் 25*25 மாடல், occasional operating zones (OOZ), மற்றும் ஹாட் டெஸ்க் போன்ற சில முக்கியமான சேவைகளையும் அறிமுகம் செய்துள்ளது. அத்துடன் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்வதற்கான எல்லா வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரியும் மேல் அதிகாரிகள் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய தொடங்குகின்றன.
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தற்போது,ஒரு சில மாதங்களில் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர உள்ளனர்.இந்நிலையில் டிசிஎஸ் நிறுவனம் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனால் பலர் வேலையை ராஜினாமா செய்யும் வழக்கம் குறைந்துள்ளதாக தகவல் எழுந்துள்ளது.இது மட்டுமல்லாமல் பல ஐடி நிறுவனங்களில் வீட்டில் இருந்தே வேலை செய்வதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது.