தமிழகத்தில் இனி மின்வெட்டு இருக்காது – அமைச்சர் செந்தில் பாலாஜி ஹாப்பி நியூஸ்!
தமிழகத்தில் உள்ள பொது மக்களுக்கு மின்சார துறை அமைச்சர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். இது குறித்த முழுமையான தொகுப்பை கீழே பார்ப்போம்.
மின்தடைக்கான முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் தற்போது இருக்கும் நவீன டிஜிட்டல் உலகத்தில் ஒரு நொடி கூட மின்சாரம் இல்லாமல் மக்களால் இருக்க முடியாது. ஆனாலும் மின் தடை ஏற்படும் போது மக்கள் ஜெனரேட்டரை பயன்படுத்தி மின்சாரத்தை பெற்று வருகின்றனர். இது போல சென்னை போன்ற பெரு நகரங்களில் மின்தடை ஏற்படும் போது ஒரு நாளுக்கு முன்னரே மின் வாரியம் சார்பில் அறிவிக்கப் படும். தமிழ்நாட்டில் மின்சாரம் தடை படாமல் கிடைக்க வேண்டும் என்றால் மின் ஊழியர்கள் மூலமாக மாதந்தோறும் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்று நாட்கள் அனைத்து மாவட்டங்களிலும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும். இவ்வாறு பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். மேலும் மின் தடை ஏற்பட உள்ள பகுதிகளுக்கு முன்னரே அறிவிப்புகளும் சென்று விடும்.
ExamsDaily Mobile App Download
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் அதிகமாக மின் வெட்டுகள் நடைபெற்று வருவதாக அரசின் மேல் புகார் எழுந்துள்ளது. மேலும் அவ்வாறு மின்வெட்டுகள் ஏற்படுவதால், விவசாயிகள், சிறு குறு தொழில் நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளனர். மேலும் நகரங்களிலும் தொடர்ந்து மின்வெட்டுகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த மின்வெட்டுக்கு முடிவு கட்ட தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு முக்கிய அறிவிப்பை தெரிவித்து உள்ளார். அது குறித்த தொகுப்பை கீழே முழுமையாக பார்ப்போம்.
தமிழகத்தின் இம்மாவட்டத்தில் ஏப்ரல் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
மின்சாரத்துறை அமைச்சர் கூறியதாவது, தமிழ்நாட்டிற்கு தினமும் 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை என்றும், மத்திய அரசு தினமும் 48,000 முதல் 50,000 டன் நிலக்கரியை ஒதுக்கீடு செய்து வந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக தினசரி நிலக்கரி ஒதுக்கீட்டை 20 ஆயிரம் டன் வரை குறைத்து வழங்குகிறது. இதனை தொடர்ந்து, அடுத்த இரு மாதங்களில் அதிக அளவில் நிலக்கரி இறக்குமதி செய்ய முதலமைச்சர் கூறி இருக்கிறார். மேலும் சீரான மின்சாரம் வினியோகிக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, அதனால் அடுத்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாடு முற்றிலுமாக மின்தடை இல்லாத மாநிலமாக மாறி விடும் என்று கூறியுள்ளனர்.