இனி ரயில்களில் சீனியர் சிட்டிசன்களுக்கு சலுகைகள் கிடையாது – மத்திய அரசு திட்டவட்டம்!
இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கு என்று வழங்கப்பட்டு வந்த சலுகைகள் இனி வரும் நாட்களில் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அரசு திட்டவட்டமாகவும் தெரிவித்துள்ளது. இதனால் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மூத்த குடிமக்களுக்கான சலுகைகள்
இந்தியின் மிக பெரிய துறையாக ரயில்வே துறை தான் பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அந்த துறை மக்களுக்கு தேவையான சேவைகளை கண்டறிந்து சலுகைகளை வழங்கியும் வருகிறது. அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்களுக்கு மட்டும் ரயில்வே துறை பல வித சலுகைகளை வழங்கி வருகிறது. அதற்காக 80 சதவீத பணத்தினையும் செலவு செய்துள்ளது. அதாவது இந்த சலுகைகளுக்காக 200 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, 58 வயதினை தாண்டிய பெண்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு வந்தது.
Exams Daily Mobile App Download
ஆண்களுக்கு 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு வந்தது. இது தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்த நிலையில், 2020ம் ஆண்டு அதாவது கொரோனா பரவல் அதிகரித்து வந்த காரணத்தாலும் நிதி நெருக்கடி அதிகமாக இருந்த காரணத்தினால் இது போன்ற சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக ரயில்வே துறை 1500 கோடி ரூபாய் வரை வெறும் 2 ஆண்டுகளில் சேமித்து உள்ளது. இது ஒரு புறம் இருக்க, தற்போது கொரோனா குறைந்து வரும் காரணத்தால் மீண்டும் இந்த சலுகைகள் அமல்படுத்தப்படுமா என்பது போன்ற கேள்விகள் எழுந்து வந்தது.
தமிழகத்தில் 10,12 வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய உத்தரவு!
அதனை உறுதி செய்யும் வகையில், வரும் ஜூலை 1ம் தேதி முதல் சலுகைகள் மீண்டும் வழங்கப்படும் என்பது போன்ற செய்திகள் பரவி வந்தது. இதனால் அனைவரும் ஆர்வம் காட்டி வந்தனர். ஆனால், இது குறித்து மத்திய அமைச்சர் வைஷ்ணவ் கூறுகையில், சமூக வலைத்தளங்களில் சலுகைகள் குறித்து பரவி வரும் செய்திகள் பொய்யானது என்றும் மீண்டும் சலுகைகள் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.