அடுத்த 3 நாட்களுக்கு LPG சிலிண்டர் விநியோகம் கிடையாது – பொதுமக்கள் அதிர்ச்சி!

0
அடுத்த 3 நாட்களுக்கு LPG சிலிண்டர் விநியோகம் கிடையாது - பொதுமக்கள் அதிர்ச்சி!
அடுத்த 3 நாட்களுக்கு LPG சிலிண்டர் விநியோகம் கிடையாது - பொதுமக்கள் அதிர்ச்சி!
அடுத்த 3 நாட்களுக்கு LPG சிலிண்டர் விநியோகம் கிடையாது – பொதுமக்கள் அதிர்ச்சி!

இலங்கையில் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்து வந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்கள், முதல் சமையல் எரிவாயு வரை அனைத்துக்கும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் இல்லை என உள்நாட்டு எரிவாயு விநியோக நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர்.

எரிவாயு சிலிண்டர் இல்லை:

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில், உணவுப் பொருட்கள் விலை உயர்வு, வருமான இழப்பு, எரிபொருள் பற்றாக்குறை, மக்கள் போராட்டம், ஆட்சி மாற்றம் என பல்வேறு பிரச்சினைகளில் இலங்கை தவித்து வருகிறது. இப்பிரச்சினைகள் பூதாகரமானதை தொடர்ந்து, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச சமீபத்தில் ராஜினாமா செய்தார். புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுள்ளார். இலங்கை பிரச்சினைகளுக்கு தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் ரணில் எடுத்து வருகிறார். மேலும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் எனக்கூறி பொதுமக்களும் சாலையில் இறங்கி போராட்டங்களை முன்னெடுத்தனர்.

Exams Daily Mobile App Download

இதனால் இலங்கை அரசு பல்வேறு நாடுகளிடம் உதவியை தேடும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், இலங்கை சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு உணவுப் பொருட்கள், அத்தியாவசிய பொருட்களை சரக்கு கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பியது. பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்த பொருட்கள் உதவியாக இருக்கும் என தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. மேலும் இலங்கையில் அடுத்த 3 நாட்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் இருக்காது என்று அந்த நாட்டு எரிபொருள் விநியோக நிறுவனமான ‘லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட்’ தகவல் தெரிவித்துள்ளது.

TN TET ஆசிரியர் தகுதித்தேர்வை ஜூலை இறுதியில் நடத்த முடிவு – தேர்வு வாரியம் அறிவிப்பு!

கடந்த செவ்வாய்கிழமை இலங்கைக்கு வந்த சிலிண்டர்கள் கடைசி இருப்பை நேற்று நிறுவனம் விநியோகித்து உள்ளது. அதன்படி, ஜூன் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை (நேற்று) மொத்தமாக 16,000 சிலிண்டர்கள் விற்கப்பட்டுள்ளன. இதையடுத்து சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வருகிற ஞாயிறு அன்று இலங்கையை வந்தடையும், இதனால் சிலிண்டர் விநியோகம் வருகிற செவ்வாய்க்கிழமை தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சிலிண்டர்களுடன் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் எரிவாயுவுக்காக பொதுமக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!