தமிழக அரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க விரும்புவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

0
தமிழக அரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க விரும்புவோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க விரும்புவோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க விரும்புவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

அரசு பள்ளிகளில் நடத்தப்படும் எல்.கே.ஜி, யு.கே.ஜி., வகுப்புகளுக்கு மூடு விழா நடத்த உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது பற்றிய முழு விவரத்தை இந்த பதிவில் பார்ப்போம்.

மூடு விழா:

தனியார் மழலையர் வகுப்புகளில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதன் மூலமாக, அரசு சத்துணவு மையங்களில் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே இருந்தது. அதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த 2018-ம் அ.தி.மு.க தலைமையில் அரசு இருந்தபோது அரசு பள்ளிகளின் வளாகத்தில் செயல்பட்டு வரும் சத்துணவு மையங்களில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளைத் தொடங்க முடிவு செய்யப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், 2020ம் ஆண்டு கொரோனா பிரச்னையால் பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் எல்.கே.ஜி., யூ.கே.ஜி சேர்க்கை நிறுத்தப்பட்டது.

அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – குறுகிய கால கடன் வட்டி விகிதம் உயர்வு! RBI அறிவிப்பு!

எல்கேஜி வகுப்புகளில் எடுக்கும் ஆசிரியர்கள் பலர் வயது அதிகமாக இருந்ததால் எல்கேஜி வகுப்புகளை எடுக்க தயங்கினார். அதனால் தங்களை தொடக்கப் பள்ளிகளுக்கு மாற்ற கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அவர்களை தொடக்கநிலை ஆசிரியர்களாக பணி அமர்த்தினார் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். இதனால் எல்கேஜி வகுப்புகளை எடுக்க ஆசிரியர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், ஒட்டுமொத்தமாக எல்.கே.ஜி., வகுப்புகளை, நடப்பு கல்வி ஆண்டில் தமிழக பள்ளிக்கல்வி துறை முழுமையாக மூட முடிவு செய்தது.

Exams Daily Mobile App Download

ஆகையால், இந்த ஆண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் மட்டுமே மாணவர் சேர்க்கை தொடங்க வேண்டும் என, கடந்த வாரம் நடந்த ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் இயக்குனர் அறிவொளி தெரிவித்திருந்தார். அதன்படி, வரும் ஜூன் 13ம் தேதி புதிய மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தஞ்சாவூரில் அளித்த பேட்டியில் அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., – யு.கே.ஜி., வகுப்புகள் நிறுத்தப்படவில்லை என்றும், பள்ளி கல்வித் துறையின் கீழ் இயங்கும் எல்.கே.ஜி., – யு.கே.ஜி., வகுப்புகள் அனைத்தும் அங்கன்வாடி மையத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது என கூறியிருக்கிறார். அதுமட்டுமன்றி, அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை சேர்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!