மத்திய அரசின் PM KISAN திட்டத்தில் தவணைத்தொகை கிடையாது – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
நாடு முழுவதும் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகள் விண்ணப்பித்தும் அவர்களுக்கு தவணைத்தொகை வராமல் இருப்பதற்கு முக்கிய காரணம் ஓன்று உள்ளது. இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
மத்திய அரசு அதிரடி:
இந்திய நாட்டில் நலிவுற்ற நிலையில் இருக்கும் விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை உயர்த்தும் வகையில் மத்திய அரசால் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM-KISAN) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதில் இணையும் தகுதியுடைய விவசாயிகளுக்கு ஆதரவு வருமானமாக நிதி ஆண்டுக்கு ரூ.6,000 நிதியானது 3 தவணைகளில் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விசாயிகளின் பேங்க் அக்கவுண்டில் இந்த நிதி தொகை நேரடியாக சென்று விடும். இதுவரை 10 தவணை நிதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 11-வது தவணை தொகை இதுவரை வரவில்லை.
SBI வங்கியில் வேலைவாய்ப்பு 2022 – ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ!
இந்நிலையில் 11வது தவணை மே 31 ஆம் தேதி விவசாயிகளின் கணக்கில் வரவிருக்கிறது என மத்திய வேளாண் துறை அமைச்சர் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். ஆனால் விண்ணப்பத்தில் ஏற்பட்ட தவறுகளால் சில விவசாயிகளின் தவணை தொகை கிடைக்காமல் போகிறது என குறிப்பிட்டுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் இணைய விவசாயிகளிடமிருந்து கோடிக்கணக்கான விண்ணப்பங்கள் மத்திய அரசுக்கு வருகிறது. ஆனால் இவற்றில் பல விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. அதற்கு காரணம் அந்த விண்ணப்பங்களில் உள்ள வங்கி விவரங்கள் முதல் பெயர், ஆதார் வரை பல்வேறு பிழைகள் உள்ளது தான். அதனால் தான் அரசால் ஒப்புதல் அளிக்கப்படாமல் விவசாயிகளின் தவணை நிறுத்தி வைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த படிவத்தை பூர்த்தி செய்யும் போது, உங்கள் பெயரை ஆங்கிலத்தில் எழுதவும்.
விண்ணப்பத்தில் இந்தியில் பெயர் உள்ளவர்கள் ஆங்கிலத்தில் பதிவிட வேண்டும். விண்ணப்பத்தில் உள்ள பெயரும், வங்கிக் கணக்கில் உள்ள விண்ணப்பதாரரின் பெயரும் வெவ்வேறாக இருந்தால், உங்கள் பணம் வராமல் போகலாம். IFSC குறியீடு, வங்கிக் கணக்கு எண் மற்றும் வங்கியின் கிராமப் பெயர் ஆகியவற்றை எழுதுவதில் தவறு இருந்தாலும், உங்கள் தவணைப் பணம் வராது. சமீபத்தில், வங்கிகளின் இணைப்பு காரணமாக IFSC குறியீடுகள் மாற்றப்பட்டுள்ளன. எனவே விண்ணப்பதாரர் தனது புதிய IFSC குறியீட்டை புதுப்பிக்க வேண்டும். pmkisan.gov.in வெப்சைட்டில் இது போன்ற திருத்தங்களை மேற்கொள்ளலாம்.