தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – வீட்டுப்பாடம் கிடையாது!
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த சனிக்கிழமை முதல் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் மாணவர்களுக்கு பதிவு செய்திருக்கும் கைப்பேசி எண் மூலமாக வீட்டுப்பாடம் கொடுக்கப்படுகிறது. இதனை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
வீட்டுப்பாடத்திற்கு தடை:
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் சரிவர இயங்கப்படவில்லை. மேலும் இந்த கல்வியாண்டு கொரோனா பரவல் காரணமாக தாமதமாக தொடங்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் காரணமாக மீண்டும் கடந்த ஜனவரி மாதம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டுக்கான பொதுத்தேர்வு குறித்த கால அட்டவணை வெளியிடப்பட்டது.
ஆதார் கார்டை அப்டேட் செய்ய நினைப்போருக்கான முக்கிய அறிவிப்பு – தவறாமல் படிங்க!
அதன்படி தற்போது 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. அதே போல் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இவர்களுக்கு மே 14 முதல் ஜூன் 12ம் தேதி வரை என ஒரு மாதத்திற்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் குஷியாக உள்ளனர். இந்த நிலையில் அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் பதிவு செய்திருக்கும் கைப்பேசி எண் மூலமாக வீட்டுப்பாடம் கொடுக்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இந்த நடவடிக்கையை தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த கோரிக்கையில், மாணவர்களுக்கு கோடை விடுமுறை என்பது கல்விச்சுமை இல்லாமல் மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் அவர்களின் மகிழ்ச்சியை கெடுக்கும் விதமாக வீட்டுப்பாடம் கொடுப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளனர். அதனால் இது குறித்து பள்ளி கல்வித்துறை ஆலோசனை மேற்கொண்டு விரைவில் இது தொடர்பாக அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.