இனி வெள்ளிக்கிழமை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது – ஷாக் அறிவிப்பு!
லட்சத்தீவில் இனிமேல் பள்ளி மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை கிடையாது என்று பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பள்ளி மாணவர்களும், அப்பகுதி மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
வெள்ளிக்கிழமை விடுமுறை:
நம் நாட்டில் பொதுவாக வார விடுமுறை என்றால் அது ஞாயிற்றுக்கிழமை தான். பள்ளி, கல்லூரிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை வாரந்தோறும் பொது விடுமுறை விடப்படும். ஆனால் லட்சத்தீவில் ஞாயிறுக்கு பதிலாக வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்படும் நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தன. தற்போது வெள்ளிக்கிழமை இனி பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது என்று அறிவிக்கப்பட்டதால் லட்சத்தீவு மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
திருநெல்வேலியில் டிச.24ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – இளைஞர்கள் கவனத்திற்கு!
லட்சத்தீவு பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிப்பதால் பல ஆண்டு காலமாக வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. அதேபோல் பள்ளி, கல்லூரிகளுக்கும், பணியில் இருப்பவர்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை விடப்படும். இந்நிலையில் பள்ளி நிர்வாகம் வெள்ளிக்கிழமை விடுமுறையை ரத்து செய்ததால் அப்பகுதி இஸ்லாமியர்களும், மாணவர்களும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை கிடையாது – வெளியான தகவல்!
வெள்ளிக்கிழமைக்கு பதிலாக லட்சத்தீவில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அறிவித்ததால் அப்பகுதியில் அதிகம் வாழும் இஸ்லாமியர்கள் பெரும் அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து லட்சத்தீவின் எம்.பி. முகமது பைசல் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு முன் மது விடுதிகளுக்கு அனுமதி, வளர்ச்சிக்கு நிலத்தை எடுத்துக் கொள்ளும் வரைவு சட்டம், குண்டர் சட்டம் மாட்டிறைச்சிக்கு தடை போன்றவை அமல்படுத்தப்பட்டு அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை ரத்து செய்தது அப்பகுதி மக்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக உள்ளது.