தமிழகத்தில் நாளை கடைகளுக்கு விடுமுறை இல்லை – வணிகர் சங்கம் அறிவிப்பு!!

0
தமிழகத்தில் நாளை கடைகளுக்கு விடுமுறை இல்லை - வணிகர் சங்கம்
தமிழகத்தில் நாளை கடைகளுக்கு விடுமுறை இல்லை - வணிகர் சங்கம்
தமிழகத்தில் நாளை கடைகளுக்கு விடுமுறை இல்லை – வணிகர் சங்கம் அறிவிப்பு!!

தமிழகத்தில் நாளை (மே 5) வணிகர் தினம் கொண்டாடப்படவுள்ளது. இதன் காரணமாக கடைகளுக்கு விடுமுறை இல்லை என வணிகர் சங்க அமைப்பு தெரிவித்துள்ளது.

கடைகள் இயக்கம்

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் தினசரி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவிர ஞாயிற்று கிழமைகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் வணிக வளாகங்கள், மால்கள் செயல்படுவதற்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு 75 லட்சம் பேர் வேலையிழப்பு – முழு ஊரடங்கு எதிரொலி!!

இது தவிர மளிகை கடைகள், காய்கறி கடைகள் செயல்பாட்டிற்கும் குறிப்பிட்ட அளவு நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளின் படி வரும் 6 ஆம் தேதி முதல் மளிகை கடைகள், காய்கறி கடைகள் ஆகியவை மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில், வரும் 5 ஆம் தேதி புதன்கிழமை அன்று வணிகர் சங்க நாள் கொண்டாடப்படாது என தருமபுரி மாவட்டம், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வணிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கொரோனா பேரிடர் காலத்தில் வணிகம் பெருமளவு பாதிக்கப்பட்டது. ஞாயிற்று கிழமைகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால் மே மாதம் 5ஆம் தேதி கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!