தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது – ஷாக் அறிவிப்பு!
தமிழகத்தில் தற்போது பல்வேறு இடங்களில் நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது சில தகுதியான பயனாளர்களுக்கு வழங்கப்படாமல் நிராகரிக்கபடுகிறார்கள். இதில் குறிப்பாக சின்னசேலம் எலவடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில் கடன் தள்ளுபடி செய்ய செயலர் மறுத்ததால் பாதிக்கப்பட்ட பயனாளிகள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
நகைக்கடன் தள்ளுபடி:
தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். ஆனால் தள்ளுபடி வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் தொடர்ந்து நடைபெறுவதாக புகார்கள் எழுந்தது. மேலும் இது தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டதில் வங்கி அதிகாரி உட்பட இந்த முறைகேடுக்கு உடந்தையாக இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் போலி நகைகளை அடமானம் வைத்து நகைக்கடன் பெறுவது, ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் நகைக்கடன் பெறுவது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் ஆய்வில் கண்டறியப்பட்டது.
இன்று அமலாகும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் – போராட்டம் எதிரொலி!
அதன்படி தற்போது நகைக்கடனுக்கு விண்ணப்பித்த 48 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் விவரங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு தகுதியான நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அத்துடன் தற்போது பல்வேறு இடங்களில் தகுதியான நபர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகையும் அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சின்னசேலம் எலவடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக்கடன் பெற தகுதியான நபர்களுக்கு அவர்களின் நகைகள் திரும்ப வழங்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து இதில் 177 பயனாளிகளுக்கு தள்ளுபடி பெற தகுதியான நபர்கள் என பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது இதில் 15க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய செயலர் மறுப்பு கூறியுள்ளதாக பயனாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்க செயலாளர் கூறியதாவது, நிராகரிக்கப்பட்ட பயனாளர்கள் நகைகள் 150 மில்லி கூடுதலாக உள்ளது. அதனால் அவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்க முடியாது என்று தெரிவித்தார்.