9ம் வகுப்பு தேர்வுகள் ரத்து – கொரோனா தொற்று எதிரொலி!!
கொரோனா பாதிப்பு:
நாடு முழுவதும் பரவிய கொரோனா தொற்று காரணமாக கேரள மாநிலத்திலும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் பாடங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. கேரள மாநிலத்தில் தொடக்கத்தில் இருந்து கொரோனா தாக்கம் அதிகமாக இருந்தது. மாநில அரசு தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அறிவித்தது.
ஜேஇஇ மார்ச் மாத தேர்வுகள் நாளை முதல் தொடக்கம் – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
கல்வி பாதிப்பு:
கொரோனா பாதிப்பு காரணமாக கேரளாவில் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் நேரடி முறையில் நடத்த இருப்பதாக அரசு அறிவித்தது. தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவி வரும் காரணத்தால் மாணவர்களுக்கான இறுதி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வந்தது. தற்போது 9ம் வகுப்புக்கான இறுதி தேர்வுகளை ரத்து செய்து மாநில அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொண்டதன் அடிப்படையில் அடித்த வகுப்பிற்கு தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளது.
கல்வி செயலாளர்:
மாநில பொது கல்வி செயலாளர் ஏ.ஷாஜஹான் அவர்கள் இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாணவர்களுக்கான மதிப்பீட்டு முறையை பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள அளவுகோல்கள் படி, மாணவர்கள் 10ம் வகுப்புக்கு உயர்த்தப்படுவார்கள் என்று கூறியுள்ளார். மேலும், 11ம் வகுப்புக்கான தேர்வுகள் ரத்து செய்வது குறித்து அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்