தமிழக கோவில்களில் தரிசனத்திற்கு கட்டணம் வசூல் கூடாது? இந்து முன்னணி அமைப்பு தலைவர் பேட்டி!
தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் பல கோவில்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்து சமய கோவில்களில் தரிசனத்திற்கு கட்டணம் வசூலிப்பது குறித்து இந்து முன்னணி அமைப்பினர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
கோவில்களில் கட்டண தரிசனம்:
தமிழகத்தில் இந்து சமய கோவில்களின் நிர்வாகத்தை முறையாக பராமரிக்கவும், பாதுகாக்கவும், மேற்பார்வையிடவும் பல ஆண்டுகளுக்கு முன் இந்து சமய அறநிலைத்துறை வாரியம் உருவாக்கப்பட்டது. தற்போது இந்து அறநிலைத்துறையின் கீழ் பல கோவில்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் இந்துக்களின் உரிமைகளை மீட்டெடுக்க பிரச்சார பயணம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் திருச்செந்தூரில் இருந்து நேற்று பிரச்சாரம் தொடங்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
அப்போது இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் இந்து கோவில்களில் வரும் வருமானத்தை அரசு எடுத்துக் கொண்டாலும் கோவிலுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை. மற்ற மதத்தில் இப்படி ஒரு நிலை இல்லை. அதனால் இந்து கோவில்களுக்கு தனியாக வாரியம் அமைக்க வேண்டும். இது குறித்து இந்து முன்னணி அமைப்பு பல முறை வலியுறுத்தி இருக்கிறது.
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – பயணிக்க இது கட்டாயமா? முழு விபரம் இதோ!
இதற்கான முயற்சி தான் இப்போது தொடங்கி இருக்கும் பிரச்சார பயணம். தற்போது உள்ள 90 சதவிகித கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்காமல் இருக்கின்றனர். மேலும் தற்போது உள்ள இந்து கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய கட்டணம் வசூலிக்க கூடாது. அவ்வாறு வசூலிக்கும் கோவில்கள் முன்னிலையில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர் தெரிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல் ஒரே ஆண்டில் 100க்கு மேற்பட்ட இந்து கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.