மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல் – அகவிலைப்படி உயர்வு கிடைக்காது?

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல் - அகவிலைப்படி உயர்வு கிடைக்காது?
மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல் - அகவிலைப்படி உயர்வு கிடைக்காது?
மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல் – அகவிலைப்படி உயர்வு கிடைக்காது?

மத்திய அரசு ஊழியர்களுக்கு, நுகர்வோர் விலைக் குறியீட்டை வைத்தே அகவிலைப்படியில் மாற்றம் செய்யப்படுகிறது. AICPI இன் இந்தத் தரவு ஒவ்வொரு மாதத்தின் கடைசி வேலை நாளில் வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜூலை மாத அகவிலைப்படி உயர்வு கிடைக்க வாய்ப்பு குறைவு என்று தகவல் வெளியாகியுள்ளது.

அகவிலைப்படி உயர்வு இல்லை:

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அகவிலைப்படி உயர்த்தும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால் அகவிலைப்படி தற்போது 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முடிவு முன் தேதியிட்டு 2022 ஜனவரி 01 முதல் வழங்கப்பட இருக்கிறது. இதனால் ஊழியர்களின் சம்பளமும் கணிசமாக அதிகரிக்கும். இந்த உயர்வு 7வது மத்திய ஊதியக்குழு பரிந்துரைகள் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டு தோறும் கூடுதலாக ரூ.9,544.50 கோடி செலவாகும்.

TN TRB 9000+ காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – அமைச்சர் பேட்டி!

இதனால் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஒரு ஆண்டுக்கு இரண்டு முறை மாற்றியமைக்கப்படுகிறது. ஜனவரி மாதத்தில் இரு முறையும் ஜூலை மாதத்தில் ஒரு முறையும் திருத்தப்படும். மேலும் சூழ்நிலையைப் பொறுத்து அது திருத்தப்படாமலும் போகலாம். அடுத்ததாக ஜூலை மாதத்தில் அகவிலைப்படி மேலும் உயர்த்தப்படும் என்று ஊழியர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் விதமாக, ஜூலையில் அகவிலைப்படி உயர்வு வருவதற்கு வாய்ப்பு குறைவு என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ExamsDaily Mobile App Download

இதுவரை வெளியாகியுள்ள அகவிலைப்படி கணக்கீட்டுக்கான புள்ளிவிவர தரவுகளின்படி, அடுத்த அகவிலைப்படி அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று தெரிகிறது. ஏனெனில் இப்போது தான் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கான அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன. மேலும் கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் 125.4 ஆக இருந்த நுகர்வோர் விலைக் குறியீடு 2022 ஜனவரி மாதத்தில் அது 0.3 புள்ளிகள் குறைந்து 125.1 ஆக பதிவாகியது. பின்னர் பிப்ரவரி மாதத்திலும் 0.1 புள்ளிகள் சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர் சரிவு காரணமாக ஜூலை மாதத்தில் அகவிலைப்படி குறைவாக இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன. இந்த தகவல் மத்திய அரசு ஊழியர்களிடையே அதிக கவலையை ஏற்படுத்தி உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!