தடுப்பூசி செலுத்தா விட்டால் சிலிண்டர், ரேஷன் கிடையாது – ஷாக் அறிவிப்பு!
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் ஒரு டோஸ் தடுப்பூசி கூட இன்னும் போடாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள், கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் வழங்கப்படாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி:
இந்தியாவில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக 18 வயது மேற்பட்டோருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி நல்ல பலனை அளிப்பதால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில், தடுப்பூசி முகாம்கள் மூலம் மக்களுக்கு அனைத்து நாட்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நாளை புஷ்பயாகம்!
இந்த ஆண்டு இறுதிக்குள் 100% தடுப்பூசி செலுத்தி முடிக்கப்பட வேண்டும் என்ற இலக்கில் அரசு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அண்மையில் இந்தியாவில் 40 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார். அப்போது மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர்கள் விகிதம் மிகக் குறைவாகவே உள்ளது. இதுவரை 55.12% தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது எனவே தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த அறிவுறுத்தினார்.
IRCTC டிக்கெட் ரத்து செய்வது எப்படி? எவ்வளவு பிடித்தம் செய்யப்படும்? முழு விபரம் இதோ!
இதனால் மக்களை தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையாக ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்தாதவர்களுக்கு இன்னும் செலுத்தாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள், கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படமாட்டாது என்று அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. உணவகங்கள் , ரிசார்டுகளுக்கு வரும் மக்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களை தடுப்பூசி செலுத்த ஊக்குவிக்கவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.