சிங்கங்களை தவிர மற்ற விலங்குகளுக்கு கொரோனா தொற்று இல்லை – வனத்துறை அமைச்சர்!!
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களை தவிர மற்ற விலங்குகளுக்கு கொரோனா தொற்று இல்லை என்று வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வண்டலூர் உயிரியல் பூங்கா :
கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி அரசு அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது அரசு செய்வதரியாமல் தவித்து வரும் நிலையில் மனிதர்களுக்கு அடுத்து சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெண் சிங்கம் ஒன்றுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
தமிழக பள்ளி ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!
அதனை தொடர்ந்து மற்ற சிங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. மேலும் சிங்களுக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 10 சிங்கங்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் நீலா என்ற பெண் சுகம் பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் மற்ற விலங்குகளும் கொரோனா தொற்று இருக்கும் என்ற அச்சம் வனத்துறைக்கு ஏற்பட்டது சிங்கங்களை தொடர்ந்து யானைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
TN Job “FB Group” Join Now
முதுமலை காப்பகத்தில் உள்ள 28 வளர்ப்பு யானைகள் மற்றும் புலிகளுக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் , வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், புலிகளுக்கு எடுக்கப்பட்ட மாதிரியில் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றார். மற்ற விலங்குகளுக்கும் கொரோனா பரவியதாக தகவல் இல்லை என்று அவர் கூறினார்.யானைகள் முகாம்களிலும் யானைகளுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று தெரிவித்தார்.