இந்தியாவில் மதம் மாறுவதற்கு தடை விதிக்கப்படவில்லை – டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து!
இந்திய அரசியலமைப்பின்படி தனி மனிதர்களுக்கு அனைத்து விதமான சுதந்திர உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளது. இதில் விதி 25 இன் படி ஒருவர் தான் விரும்பும் எந்த மதத்தையும் பின்பற்றும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு எதிராக ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளதை பற்றி விரிவாக பார்ப்போம்.
தடை இல்லை
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. அதாவது அனைத்து மதத்தினரும் தங்களின் மதத்தை பின்பற்றி கொள்ளலாம். அத்துடன் சிறுபான்மையினர் தங்களின் மதத்தை பின்பற்றவும் பாதுகாக்கவும் உரிமை உள்ளது. இதற்கான உரிமை இந்திய அரசியலைப்பில் கலாச்சார உரிமை என்பதன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியாவில் குடி பெயரும் எந்த மதத்தினரும் தங்களின் மதத்தை பின்பற்றலாம். இவர்கள் வேறு மதம் மாற வேண்டிய கட்டாயமில்லை. அதேபோல் நீங்கள் உங்களுக்கு பிடித்த மதத்தை பின்பற்ற உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அத்துடன் கல்வி நிறுவனங்களில் மதம் சார்ந்த நிகழ்வுகளில் உங்களுக்கு விருப்பமில்லையெனில் நீங்கள் கலந்து கொள்ளாமலும் இருக்கலாம். இதனை விதி 28 என்பதன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு தனிநபர் இந்த மதத்தை தான் பின்பற்ற வேண்டும் என்கிற கட்டாயமில்லை. அத்துடன் ஒரு நபரை இந்த மதம் தான் பின்பற்ற வேண்டும் என்றும் நீங்கள் இந்த மத மாற வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். மேலும் இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தாவது, தனிநபர் ஒருவர் தான் விரும்பிய மதத்தை பின்பற்ற உரிமை உண்டு. அத்துடன் தான் விரும்பும் மதத்திற்கு மாற சட்டப்படி அவர்களுக்கு உரிமை உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதம் மாறுவது எந்த சட்டத்தின்படியும் தடை செய்யப்படவில்லை என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமையில் விதி 25 என்பதன் கீழ் ஒருவர் தான் விரும்பும் எந்த மதத்தையும் பின்பற்றும் உரிமை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.