தமிழக அரசு பள்ளிகளில் இந்த வகுப்புகள் இனி கிடையாது – கல்வித்துறை திடீர் விளக்கம்! ஆசிரியர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை ரத்து செய்வதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை எதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதை விரிவாக இந்த பதிவில் பார்ப்போம்.
எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்:
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆனால் வரும் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. அதனால் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த கோடை விடுமுறை முடிவதற்குள் ஆசிரியர்கள் பேரணி நடத்த வேண்டும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் ஊக்கப்பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை இன்ஜினியரிங் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – செமஸ்டர் தேர்வு கால அட்டவணை வெளியீடு!
ஆனாலும் இந்த ஆண்டு தொடக்கநிலை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாகவே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அரசு பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை ரத்து செய்ததாகும். கடந்த ஆட்சியில் தொடக்கநிலை பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டது. அத்துடன் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு தொடக்கநிலை பள்ளிகளிலிருந்து ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். அதனால் பெற்றோர்களும் தனியார் பள்ளிகளில் சேர்ப்பதை தவிர்த்து அரசு பள்ளிகளிலேயே சேர்த்தனர்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் தற்போது அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் ரத்தானது பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் அரசு பள்ளிகளில் ரத்து செய்யப்பட்டதற்கு அரசு சார்பாக விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 1 முதல் 5 வகுப்பு மாணவர்களை கையாள அதிக ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். அதனால் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை எடுக்க நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் இடைநிலை வகுப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.