தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பழைய முறைப்படி பொருட்கள் விநியோகம்!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - பழைய முறைப்படி பொருட்கள் விநியோகம்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - பழைய முறைப்படி பொருட்கள் விநியோகம்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பழைய முறைப்படி பொருட்கள் விநியோகம்!

தேனி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் பயோமெட்ரிக் கருவியில் சில சிக்கல்கள் இருந்ததால் பொருட்களை வாங்க முடியாமல் ரேஷன் அட்டைதாரர்கள் சிரமப்பட்டனர். இதனால் பழைய முறைப்படி பொருட்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

ரேஷன் கடை:

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு பயோமெட்ரிக் முறை நடைமுறையில் உள்ளது அதன் படி கைரேகை பதிவு செய்யப்பட்டு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பயோமெட்ரிக் திட்டத்தின்படி, ரேஷன் கார்டுகளில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே, ரேஷன் கடைக்குச் சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியும். தற்போது இந்த பயோமெட்ரிக் கருவியில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது. பயோமெட்ரிக் கருவியில் கைரேகை பதிவாகாததால் ரேஷன் அட்டைதாரர்கள் பொருட்களை வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் செவ்வாய் கிழமை (அக்.26) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

வயதானவர்களின் கைரேகை பயோமெட்ரிக் இயந்திரத்தில் பதிவாகவில்லை. இதனை சரி செய்ய கோரி பொது மக்களும் ரேஷன் கடை ஊழியர்களும் கோரிக்கை விடுத்தனர். வயதானவர்களுக்கு கை விரல் ரேகைகளில் தேய்வு மற்றும் சுருக்கங்கள் ஏற்படுவதால் அவர்களின் கைரேகை பயோமெட்ரிக் இயந்திரத்தில் பதிவாகவில்லை . அதனால் அவர்கள் பயோமெட்ரிக் அப்டேட் செய்ய வேண்டும் என்று உணவு வழங்கல் துறை உத்தரவிட்டது. இதனையடுத்து மாவட்ட தாலுகா அலுவலகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் பயோமெட்ரிக் முறை விரல் ரேகையை திருத்தம் செய்து வந்தனர்.

தமிழக பள்ளிகளில் தூய்மை பணியாளர்கள் நியமனம் – ஆசிரியர் கூட்டணி கோரிக்கை!

இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பெரும்பாலும் முதியவர்களின் விரல் ரேகை பதிவு ஆகாமல் இருந்ததால் முதியவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையை சரி செய்ய, பழைய முறைப்படி ஏடுகளில் பதிவு செய்து அதன் பிறகு பொருட்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் குறிப்பாக முதியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனி கைரேகை பதிவாகாதவர்களுக்கு ரேகை இன்றி பதிவு செய்யப்பட்ட பிறகு பொருட்கள் வழங்கப்படும் என்று தேனி மாவட்ட ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!