பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத்திற்கு பக்தர்கள் அனுமதி ரத்து – ஆட்சியர் உத்தரவு!

0
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத்திற்கு பக்தர்கள் அனுமதி ரத்து - ஆட்சியர் உத்தரவு!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத்திற்கு பக்தர்கள் அனுமதி ரத்து - ஆட்சியர் உத்தரவு!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத்திற்கு பக்தர்கள் அனுமதி ரத்து – ஆட்சியர் உத்தரவு!

தமிழகத்தில் ஓமிக்ரான் பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது. இந்நிலையில் வருகிற தை பூசத்தன்று பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்த்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா கட்டுப்பாடுகள்:

நாடு முழுவதும் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இதன் பாதிப்பு வீரியம் எடுத்துள்ளது. அதனால் இதுவரை கொடுக்கப்பட்ட ஊரடங்கு தளர்வுகளை நீக்கி மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வார இறுதி நாள் ஞாயிற்று கிழமை ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜன.31 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜனவரி 25ம் தேதி வரை சேவல் சண்டை நடத்த தடை – மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மேலும் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டு தலங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறை நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி போடும் முகாம்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே பொது இடங்களில் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

சென்னை ஐகோர்ட் அலுவலக தூய்மை பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு – பிப்.4 கடைசி நாள்!

இந்நிலையில் தைப்பூசம் வருகிற 18ம் தேதி நடைபெற இருக்கிறது. அதனால் பிரசத்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவிற்கு பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருவார்கள். அதனால் கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதால் நேரடியாக பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் வருகிற ஜனவரி 18ம் தேதி தைப்பூசத்தன்று மாலை 4.45 மணிக்கு கோயில் பணியாளர்களை கொண்டு தேரோட்டம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பழனி கோயில் தைப்பூச நிகழ்வுகள் கோயில் வலைத்தளம், யூடியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் விசாகன் அறிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!