NMMS தேர்வுக்கு காலக்கெடு நீட்டிப்பு – அரசுத்தேர்வுகள் இயக்குனர் அறிக்கை!!
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறும் நோக்கில் NMMS தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது நடப்பு கல்வியாண்டிற்கான NMMS தேர்வில் மாணவர்களின் விபரங்களை பதிவேற்றுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அரசுத்தேர்வுகள் இயக்குனர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
NMMS தேர்வு:
தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவி தகுதித் தேர்வு (NMMS) 2020-21 கல்வியாண்டிற்கான அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. இதில் பங்கேற்க உள்ள 8ம் வகுப்பு மாணவர்களின் விபரங்களை அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பெற்று அதற்கான விண்ணப்பத்தை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வு பிப்ரவரி 21ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகியது.
தமிழகத்தில் ஜனவரி 19 முதல் பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
இந்த தேர்வில் பங்கேற்க உள்ள மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். நடப்பு கல்வியாண்டில் 8ம் வகுப்பு படிப்பவராக இருக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளது. தற்போது இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விபரங்களை பதிவேற்றுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் மேலும் 7 இடங்களில் அகழ்வாராய்ச்சி – தொல்லியல் துறை அறிவிப்பு!!
இது தொடர்பாக அரசுத்தேர்வுகள் இயக்குனர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், 21.02.2021 அன்று நடைபெற உள்ள NMMS தேர்விற்கான பள்ளி மாணவர்களின் விபரங்களை பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் 20.01.2021 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை முதன்மை கல்வி அலுவலர்கள் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்