தமிழில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை – நாம் தமிழர் கட்சியின் சீமான் அறிவிப்பு!!
தமிழகத்தில் இனி தமிழில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்படும் என்று, பல முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல்:
தமிழகத்தில் 2021ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்க இருக்கிறது. தேர்தல் ஆணையம் தேர்தல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. தேர்தலுக்கான பயிற்சி பணிகள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
6 முதல் 9ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 15 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
மனுதாக்கல்:
ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில், தேர்தலுக்கான மனுதாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, மார்ச் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். மனுதாக்கல் செய்தவர்களின் பட்டியலை பரிசீலினை செய்து தேர்தல் ஆணையம் இறுதி வேட்பாளர் பட்டியலை கடந்த 24ம் தேதி வெளியிட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரம்:
அரசியல் கட்சிகளின் சார்பில் ஓட்டு சேகரிப்பிற்காக தேர்தல் பிரச்சாரம் தமிழகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சோலார் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கொள்கைகள்:
தமிழகத்தில் முழுவதுமாக தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்படும் என்ற திட்டத்தை நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் அறிவிப்போம் என்று கூறினார். அனைத்து துறைகளிலும் உள்ள ஊழல்களை முறியடிப்போம். முதல்வர் முதல் அனைத்து அரசுத் துறையினரும் அரசு மருத்துவமனையில் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும் என்ற திட்டத்தையும் கொண்டு வர இருப்பதாக அறிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்