NLCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
NLC India Limited (NLCIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. Advisor (Corporate Contracts) பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (16.08.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழுமையான விவரங்களும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.
NLCIL வேலைவாய்ப்பு விவரங்கள்:
NLC India நிறுவனத்தில் Advisor (Corporate Contracts) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரி
அல்லது பல்கலைக்கழகங்களில் B.E / B.Tech பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். Advisor (Corporate Contracts) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் PSU அரசு நிறுவனங்களில் Senior Executive (Grade Level E8) பணியில் குறைந்து 30 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
Exams Daily Mobile App Download
Advisor (Corporate Contracts) பணிக்கு அதிகபட்சம் 64 வயதிற்குள் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இப்பணிக்கு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறையின் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். இவ்வாறு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ஓய்வு பெறும்போது பெற்ற ஊதியம் அல்லது தேர்வு குழு பரிந்துரை செய்யும் ஊதியத்தை மாத ஊதியமாக பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் Best TNPSC Coaching Centre
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து The Chief General Manager (HR), NLC India Limited, Corporate Office, Block-01, Neyveli – 607 801 என்ற முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க 16.08.2022 அன்று வரை மட்டுமே கால நேரம் வழங்கப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.