என்எல்சி நிறுவன பணிகளில் தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு – தேர்வர்கள் அதிர்ச்சி!!
நெய்வேலியை தலைமையிடமாக கொண்ட என்எல்சி நிறுவனத்தில் அண்மையில் நடைபெற்ற எழுத்து தேர்வு முடிவில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மிக குறைவாக தேர்ச்சி பெற்று உள்ளதால் தேர்வுக்கு தயாராகி வந்த தமிழ் இளைஞர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு:
என்எல்சி நிறுவனம் நெய்வேலியை தலைமியிடமாக கொண்டுள்ளது. ‘நவ ரத்னா’ அந்தஸ்து பெற்றுள்ள இந்த நிறுவனத்தில் 259 பொறியாளர் பணியிடங்களை நிரப்ப அண்மையில் பல நகரங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த 30 ஆம் தேதி இந்த நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
10 & 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான காமராஜர் விருது – பிப்ரவரி 5 கடைசி நாள்!!
பின்னர் நேர்முக தேர்வுக்கு தேர்ந்தெடுக்கபட்ட 1582 பேரின் பெயர் பட்டியலை இந்த நிறுவனம் வெளியிட்டது. அதில் குறைவான எண்ணிக்கையில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருந்தனர். வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். ஏற்கனவே ரயில்வே, வருமானவரி, அஞ்சல் துறை, உளவுத்துறை என பல துறைகளில் தமிழக இளைஞர்கள் புறக்கணிக்கப்படுவதாக புகார் வந்துள்ளது, இந்த வரிசையில் தற்போது என்எல்சி நிறுவனமும் இணைந்துள்ளது.
தமிழக அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – கலந்தாய்வு தேதி அறிவிப்பு!!
ஏற்கெனவே, என்எல்சியில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்கள், இறந்தோர் வாரிசு, என்எல்சிக்காக வீடு நிலம் கொடுத்தோர் என பலர் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனர். இந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் தேர்வுக்கு தயாராகி வரும் தமிழ்நாட்டு இளைஞர்கள் பெரும் வருத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்