NLC விவகாரம்: தேவையான நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும் – அமைச்சர் பதிலடி!

0
NLC விவகாரம்: தேவையான நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும் - அமைச்சர் பதிலடி!
NLC விவகாரம்: தேவையான நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும் - அமைச்சர் பதிலடி!
NLC விவகாரம்: தேவையான நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும் – அமைச்சர் பதிலடி!

தமிழக சட்டப்பேரவையில் என்எல்சி விவகாரத்தில் தேவைக்கு அதிகமான நிலங்களை அரசு ஒருபோதும் கையகப்படுத்த நினைக்காது என அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடியாக பதிலளித்துள்ளார்.

NLC விவகாரம்

தமிழகத்தில் மின் தேவையை பூர்த்தி செய்ய NLC நிறுவனம் மின் உற்பத்திக்காக நிலங்களை விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்த வேண்டியுள்ளது. அதற்காக தற்போது விவசாயிகளுடன் அரசு பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகிறது. மேலும் நிலங்களை வழங்கும் உரிமையாளர்களுக்கு அதற்கான இழப்பீடு தொகை மற்றும் நிரந்தர வேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – டிகிரி தேர்ச்சி போதும்..!

இந்த நிலையில் என்எல்சி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளதாவது, NLC நிறுவனத்தில் 1711 பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதால், நிலம் அளித்தவர்களுக்கு இப்பணியில் சேர்வதற்காக கூடுதலாக 20 மதிப்பெண்கள் வழங்கப்படும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

அத்துடன் நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படுவதற்கான இறுதி கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் விவசாயிகளிடமிருந்து தேவையான நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும் என்றும் தேவைக்கு அதிகமான நிலங்களை அரசு ஒருபோதும் கையகப்படுத்த நினைக்காது என்றும் பதிலளித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!