NLCIL நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!
என்எல்சி இந்தியா லிமிடெட் (NLCIL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Advisor for Corporate Planning & Projects Monitoring (CP & PM) பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- என்எல்சி இந்தியா லிமிடெட்டில் (NLCIL) Advisor for Corporate Planning & Projects Monitoring (CP & PM) பணிக்கு என 01 பணியிடம் காலியாக உள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Engineering பாடப்பிரிவில் Bachelor’s Degree (B.E / B.Tech) பெற்றவராக இருக்க வேண்டும்.
- Advisor for Corporate Planning & Projects Monitoring (CP & PM) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் அரசு அலுவலகங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 30 வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.
- விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 64 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர் ஓய்வு பெறும்போது பெற்ற ஊதியம் அல்லது தேர்வு குழு பரிந்துரை செய்யும் ஊதியத்தை மாத ஊதியமாக பெறுவார்கள்.
- Advisor for Corporate Planning & Projects Monitoring (CP & PM) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 13.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.